சென்னை, நவ.23- பொது சுகாதாரத் துறை யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சர்வ தேச மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ள 2,000 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார். சென்னை எழும்பூரிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். பொது சுகாதார துறை நூற்றாண்டு விழாவிற்காக தெருக்குறல் அறிவுஎழுதி, இசையமைத்து பாடிய பாடலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “போலியோ, காலரா உள்ளிட்ட பல நோய்களை பொது சுகா தாரத்துறை ஒழித்துள்ளது. தற்போது கொரோனாவையும் இந்த துறை சிறப்பாக கையாண் டுள்ளது”என்றார். பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச மருத்துவ மாநாடாக நடைபெறு கிறது. இதில் பங்கேற்க 2000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர். 250க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வறிக்கைகள் வந்துள்ளன. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நடத்தும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிக எண்ணிக் கையிலான மருத்துவர்கள் பதிவு செய்ததில் இருந்தே, இந்த துறையின் தரத்தை புரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் பேசும்போது, “மருத்துவம் குறித்த விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படுத் தவும், பொது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வுமே நூற்றாண்டு விழா கொண் டாடப்படுகிறது” என்றார்.