states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“கத்தரி வெயில்” நிறைவு பெற்று தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், வடமாவட்டங்களில் இன்னும் வெயில் குறையாமல் வெப்ப அலைக்கு நிகராக வெப்பநிலை நிலவிவருகிறது. வெள்ளியன்று புதிய உச்சமாக சென்னை மீனம்பாக்கத்தில்108 டிகிரி அளவிற்கு வெயில் சுட்டெரித்தது.

கிர்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த தொட ரின் 55 கிலோ எடைப்பிரிவிற்கான வெண்கலப் பதக்கப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் யெர்சினை வீழ்த்தி, மஞ்சீத் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியல் கட்சியை நடத்தாமல் அரசு சாரா நிறுவனத்தை தொடங்க வேண்டும். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதில் காங்கிரஸின் பங்களிப்பு எதுவும் இல்லை. பாஜகவின் தோல்வியால்தான் அக்கட்சி வெற்றி பெற்றது என்று பிஆர்எஸ் தலைவர் கே.டி.ராமாராவ் கூறினார். 

“மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்து, பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும், இல்லையெனில் ஜூன் 9 அன்று மல்யுத்த வீரர்களுடன் தில்லி ஜந்தர் மந்தருக்கு பேரணியாக சென்று, நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்” என பாரதிய கிஷான் யூனியன் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில்,  தாம்பூல பையில் மதுபானம் கொடுத்த விவகாரத்தில்,  மதுபானம் கொடுத்த நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் அளித்து கலால்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதம் 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்த நிலையில், மேலும் 200 மீன வர்களை விடுதலை செய்ய உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ அறிவித்துள்ளார்.

சென்னை சின்னமலை பேருந்து நிறுத்தத்தில் சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரை டிக்கெட் பரிசோதகர்கள் தாக்கிய வீடியோ வெளியான சம்பவத்தில், தாமாக முன்வந்து மாநில மனித உரிமை கள் ஆணையம் விசாரணை தொடங்கியுள்ள நிலை யில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.