மார்ச் 20 வரை கைது செய்யத் தடை
புதுதில்லி, மார்ச் 7 - “தமிழ்நாட்டில் இந்தி பேசிய 12 இடம்பெயர் தொழிலாளர்கள் கழுத்தறுத்துப் படுகொலை” என்றும், 15 தொழிலாளர்கள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்கள் என்றும் உ.பி. பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ், டுவிட்டர் சமூகவலைதளத்தில் வதந்தி பரப்பியிருந்தார். இந்த வதந்தியை, ஏனைய உ.பி. பாஜக தலைவர்களும், அவர் களது ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பினர். ‘டைனிக் பாஸ்கர்’ என்ற இந்தி செய்தித்தாளின் தலைமை ஆசிரி யர், ‘தன்வீர் போஸ்ட்’ என்ற டுவிட்டர் கணக்கின் உரிமையாளர் முகமது தன்வீர் ஆகியோரும் இதே வதந்தி யை பரப்பினர். இது வடமாநிலங்களில் பதற் றத்தையும் பீதியையும் ஏற்படுத்தி யது. இதையடுத்து, பிரசாந்த் உமா ராவ், உள்ளிட்ட 3 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக, பிரசாந்த் உமாராவ் மீது ஜாமீனில் வர முடி யாத பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். மேலும் அவரைக் கைது செய்வ தற்கு திருச்செந்தூர் தனிப்படை காவல்துறையினர் தில்லிக்கும் விரைந்தனர்.
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமீன் கோரி பாஜக செய்தித் தொடர்பா ளர் பிரசாந்த் உம்ராவ் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனு வில், “பொய் செய்திக்கு நான் பலி கடா ஆகிவிட்டேன். வேண்டு மென்றே உள்நோக்கத்தோடு பரப்பவில்லை. பாஜக-வை சேர்ந்த வர் என்பதால் அரசியல் நோக்கத் தோடு என் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலா ளர்களின் நிலை தொடர்பாக தனது வேதனையை பகிர்ந்து கொள்வ தற்காகவே டுவீட் செய்தேன். ஊட கங்கள், பிரபலங்கள் வெளியிட்ட செய்தியை பகிர்ந்தேன், அது போலி யானது என தெரிந்ததும் நீக்கி விட்டேன்” என்று கூறியிருந்தார். இந்த மனு தில்லி உயர்நீதி மன்றத்தில் செவ்வாயன்று நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வதந்தியை பரப்புவது தேச விரோத செயல்; இந்தியாவையே பிளக்கும் செயல்” என்றும் “வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை” என்றும் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜஸ்மீத் சிங், பிரசாந்த் உமா ராவை மார்ச் 20 வரை கைது செய்வ தற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், பிரசாந்த் உமாராவ், சென்னை உயர்நீதி மன்றத்திலோ அல்லது சம்மந்தப் பட்ட (தூத்துக்குடி) நீதிமன்றத்திலோ ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்த நீதி பதி, அவரது செல்போன் லொகே ஷன் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய வற்றை ஆன் செய்தபடியே வைத்தி ருக்க வேண்டும் என்றும் உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்தார்.