states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வியாழன் கிரகத்தில் 12 புதிய நிலாக்கள்

கேப்கார்னிவல்,  (புளோரிடா) பிப்.5- வியாழன்(ஜூபிடர்) கிரகத்தில் 12 புதிய நிலாக்கள்  அமெரிக்க வானியல் அறிஞர்களால்  கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளன. இதன்மூலம், சூரிய குடும்பத்திலேயே அதிகபட்சமாக 92 நிலாக்களுடன் வியாழன் கிரகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 83 நிலாக்களுடன் முதலிடத்தில் இருந்த சனி கிரகம் இரண்டாம் இடத்திற்குத்  தள்ளப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள  கார்னகி அறிவியல் கல்வி நிறுவனத்தை சேர்ந்த வானியலாளர் ஸ்காட் எஸ். ஷெப்பர்ட் இந்தக்  கண்டுபிடிப்புகளை அறிவித்துள்ளார். இந்நிறுவனத்தின் வானியல் அறிஞர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய 12 நிலாக்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன. சர்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறு கிரக மையம் நிர்வகிக்கும் சிறு கிரகங்களின் பட்டியலில் இந்தப் புதிய 12 நிலாக்களும் இணைக்கப்பட்டன. இது தொடா்பாக ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற அமெரிக்காவின் பிரபல வானியல் அறிஞர்  ஸ்காட் ஷெப்பர்ட் கூறுகையில், இவை 2021-ஆம் ஆண்டு,  2022-ஆம் ஆண்டில்  ஹவாய் மற்றும் சிலியில் தொலைநோக்கிகளைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய நிலவுகள் 0.6 மைல் முதல் இரண்டு மைல் (ஒரு கிலோமீட்டர் முதல் மூன்று கிலோமீட்டர் வரை) அளவில் இருக்கும் என்றார்.

மலம் தின்ன வைத்த  குவாரி முதலாளிக்கு சிறை

விழுப்புரம், பிப்.5- விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரை கிராமத்தில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. 2012  ஜனவரி 31ஆம் தேதி துரை (எ) பழனியாண்டி எனும் குவாரி முதலாளி தன்னிடம் கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவர்  சம்மட்டியைத் திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டினார். அந்தத் தொழிலாளி தப்பிச் சென்று விட்டதால் அவரு டன் வேலை செய்த வெள்ளையன் என்ற தொழிலாளி யின் வீடு புகுந்து அவரைப் அடித்து இழுத்துச் சென்றார்.  அதைத் தடுத்த வெள்ளையனின் மனைவி பூபதி மற்றும்  மாமியார் சின்னப்பொண்ணு இருவரையும் முதலாளி யுடன் வந்த அடியாட்கள் அடித்து உதைத்ததோடு வீட்டிலி ருந்த டிவி மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட விலை  உயர்ந்த பொருட்களையும் தூக்கிச் சென்றனர்.  வெள்ளையனை குவாரிக்கு இழுத்துச் சென்று முத லாளி துரை கடுமையாக தாக்கியதுடன், உனக்கு இது தான்டா தண்டனை எனக்கூறி மலத்தை தின்ன வைத்து,  அதை குரூர புத்தியுடன் செல்போனில் படம் பிடித்து  சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது ஆணவத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவமானப்பட்ட தொழி லாளி வெள்ளையன் வீடு திரும்பவே இல்லை.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தலை யிட்டு அவரது மனைவி மூலம் வெள்ளையனை இரண்டு  நாட்கள் தேடிக் கண்டுபிடித்து, அதன் பிறகு வானூர் காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்  துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வழக்குப் பதிவு செய் யப்பட்டது.  வானூர் நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளாக வழக்கு  நடைபெற்றது. குவாரி முதலாளி வழக்கை நீர்த்துப் போக வைத்திட பல லட்சங்களை வாரி இறைத்தார். வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் சிபிஎம் தலைவர்கள் பாதிக்கப் பட்ட வெள்ளையன், பூபதி மற்றும் சாட்சிகளுக்கு துணை  நின்றனர். இந்நிலையில் வானூர் குற்றவியல் நீதி மன்றத்தில் மாஜிஸ்திரேட் எம்எஸ் வரலட்சுமி குவாரி முதலாளி பழனியாண்டியை குற்றவாளி என அறிவித்து ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இது சிபிஎம் வானூர் வட்டக்குழுவின் இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முத்துக்குமரன் கூறினர்.

அந்தமான் முன்னாள் செயலர் மீது 935 பக்க குற்றப்பத்திரிகை

போர்ட் பிளேர், பிப்.5- 21 வயது இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அந்தமான் முன்னாள் தலைமைச் செயலாளர் மீது, 935 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமைச் செயலாளராக இருந்தவர் ஜிதேந்திர நரைன். இவர் தலைமைச் செயலாளராக இருந்தபோது அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி 21 வயது இளம்பெண்ணை தமது பங்களாவில் வைத்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்தாண்டு அக்டோபர்  மாதம் 21-ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்தார். அத்தோடு தலைமைச் செயலர் பங்களா வின் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டுமெனவும் கூறியிருந்தார்.  தொடர்ந்து அக்டோபர் 10-ஆம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டு  நவ.10-ஆம் தேதி ஜிதேந்திர நரைன் கைது செய்யப்பட்டார். அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின்  பிரிவுகள் 367, 376-சி, 376-டி, 354, 328, 201, 120-பி, 500, மற்றும் 228-ஏ ஆகிய வற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்தக் கூட்டுப்  பாலியல் வன்கொடுமை சம்பவத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  இந்நிலையில், ஜிதேந்திர நரைன் உட்பட சிறையில் உள்ள மூன்று பேர் மீது 935 பக்க குற்றப்பத்திரிக்கையை பிப்.3-ஆம் தேதி தாக்கல் செய்துள்ளது.  90 சாட்சிகளை விசாரித்து பல்வேறு மின்னணு, தொழில்நுட்ப மற்றும் உயிரியல் ஆதாரங்களை சேகரித்துள்ளது சிறப்பு விசாரணைக்குழு. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட மின்னணு மற்றும் உயிரியல் ஆதாரங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆரூரான் சர்க்கரை ஆலை சிக்கலுக்கு  தீர்வு காண பாமக வலியுறுத்தல்

சென்னை, பிப்.5 தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த திரு மண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மோசடியைக் கண்டித்து உழவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இரு மாதங்களைக் கடந்து போராட்டம் நீடிக்கும் நிலையில், இந்த சிக்கலைத் தீர்க்க தமிழக அரசின் சார்பில் இதுவரை பயனளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆரூரான் சர்க்கரை ஆலை, வங்கிகளுக்கு ரூ.150 கோடி கடன், உழவர்களுக்கு ரூ.125 கோடி  நிலுவைத் தொகை வழங்க வேண்டியிருந்த நிலையில் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் திவாலாகி விட்டதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு தான் அந்த ஆலை நிர்வாகம் விவசாயிகள்  பெயரில் கடலூர் மாவட்டத்தில் ரூ.90 கோடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.360 கோடி கடன் வாங்கி  மோசடி செய்திருப்பது தெரியவந்தது.  எந்த குற்றமும் செய்யாத விவசாயிகள், சர்க்கரை ஆலைக்கு தாங்கள் வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகையையும் பெற முடியாமல்,  தங்கள் பெயரில் வங்கிகளில்  ஆலை நிர்வாகம் வாங்கிய கடனையும் சுமந்து கொண்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியது அரசின் கடமை ஆகும். விவசாயிகளின் பெயர்களில் ஆரூரான் சர்க்கரை ஆலையில் பழைய நிர்வாகம் வாங்கிய கடன்களை புதிய நிர்வாகமே  ஏற்றுக் கொள்வதற்கும், உழவர்களுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை  வட்டியுடன் பெற்றுத் தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.

வறண்ட வானிலை நிலவும்

சென்னை, பிப்.5 குமரிக்கடல் மற்றும்  மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவு கிறது. இது மேலும் வலுவிழக்கக்கூடும் என்பதால் செவ்வாய்கிழமை (பிப்.7) வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ க்கூடும். இதைத் தொடர்ந்து பிப்.8-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்க ளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உணவுக்கு உத்தரவாதமில்லை:  தவிக்கும் ஆப்கன் பெண்கள்

காபூல், பிப்.5-  தேசிய, சர்வதேச அமைப்புகளில் பெண்கள் பணிபுரிய விதிக்கப்பட்ட தடை  காரணமாக ஆப்கனைச் சேர்ந்த திருமண மாகாத பெண்கள், கணவரை இழந்த பெண்கள் உணவுக்கு உத்தரவாதமின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கு  பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளன. நடுநிலை கல்வி  மற்றும் உயர் கல்வி கற்க ஆப்கன் பெண் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்  துணை இன்றி பெண்கள் வெளியே செல்ல வும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய, சர்வதேச அமைப்புகளில் பெண்கள் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலைக்குச் செல்லும் ஆண்கள் உள்ள குடும்பங்களில் மட்டுமே அனைவருக்கும் உணவு கிடைத்து வருகிறது. வயதான ஆண்கள், வேலைக்குச் செல்ல  முடியாத நிலையில் உள்ள ஆண்கள் உள்ள குடும்பங்களிலும், ஆண்களே இல்லாத  குடும்பங்களிலும் பெண்களின் வரு மானத்தைக் கொண்டே இதுவரை அவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அதற்கான வாய்ப்பு  தற்போது மறுக்கப்பட்டுள்ளதால், திருமண மாகாத பெண்கள், விதவைகள் உள்பட  அதிக அளவிலான பெண்கள் உணவுக்கு  உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள் ளார்கள். முந்தைய ஆப்கன் அரசில் பாதுகாப்புத்  துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தியாகிகளுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் தலிபான்களுக்கு எதிராக போரிட்டவர்கள் என்பதால், அந்த உதவித்  தொகையை தலிபான் அரசு நிறுத்திவிட்டது.  இதன் காரணமாக, அரசின் உதவித் தொகை யை பெற்று வந்த குடும்பங்கள் தற்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன. இதேபோல் நகராட்சி, மாநகராட்சி பணி களில் முன்பு பணியில் இருந்த ஆண்கள் நீக்கப்பட்டு, அங்கு தலிபான்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனால், ஆண்கள் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மாற்று வேலை கிடைக்காமல் பிச்சை எடுத்து  குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கனில் கடந்த 2018-ல் 72 சதவீதம் மக்கள் ஏழ்மை நிலையில், அது தற்போது 97 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015-ல்  பெண்கள் தலையிலான குடும்பங்கள் 1.7 சத வீதமாக இருந்த நிலையில், அது தற்போது  4 சதவீதமாக உள்ளதாகவும் ஐநா உலக உண வுத் திட்டத்தின் புள்ளி விவரம் கூறுகிறது. பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் உணவுக்கு உத்தரவாதமின்றி இன்னும் எவ்வளவு காலத்திற்கு தாக்குப் பிடிக்க முடியும் என்பது மனித குலத்தை உலுக்கும் மிகப் பெரிய கேள்விக்குரியாக மாறி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சிலியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பயங்கர காட்டுத் தீ: 22 பேர் பலி

சான்டியாகோ, பிப்.5-  தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத் தீயினால் இதுவரை 22 பேர் வரை பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ‘‘தென் அமெரிக்க நாடான சிலியில், கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான காட்டுப் பகுதி களில் தீ பிடித்தது. காட்டுத் தீ காரணமாக இது வரை 22 பேர் பலியாகினர். காட்டுத் தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகளில் சிலி  அரசு ஈடுபட்டு வருகிறது. விமானம் மூலம்  தண்ணீர், ரசாயனம் ஆகியவை காட்டுத் தீ அதிகம் உள்ள இடங்களில் தெளிக்கப்படுகிறது. எனினும் தீயின் தீவிரத்தால் காட்டுத் தீயை அணைப்பது சவாலாக இருப்பதாக சிலி மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீயினால் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ காரணமாக அவசர நிலையை சிலி அரசு அறிவித்துள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீ என்று சிலி அரசு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பூமியின் வெப்ப நிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்த  நிலை தொடர்ந்தால் 2040-ஆம் ஆண்டுக்குள்  பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிடும். பூமியின் வெப்ப நிலை உயர்வு 2 டிகிரி செல்சியஸை தாண்டினால் மிகப்  பெரிய பேரழிவு ஏற்பட்டு மனித இனங்களும், பிற உயிரினங்களும் வாழ முடியாத கடின மான சூழல் உருவாகிவிடும் என்று விஞ்ஞானி கள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றத் தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் கால  நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை களை எடுக்குமாறும் விஞ்ஞானிகள் உலகத் தலைவர்களை வலியுறுத்தி வருகின்றனர்.