ஒடிசா சாலை விபத்தில் 12 பேர் பலி
ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி யில் கலந்து கொண்டவர்கள் தனியார் பேருந்தில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது கஞ்சம் மாவட்டத்தின் திகபஹண்டி காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, இரவு 1 மணியளவில் ராயகடா மாவட்டத்தில் உள்ள குடாரியில் இருந்து, எதிர்த் திசையில் வந்த பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயம் அடைந் துள்ளனர். இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
உலகப் போட்டித்தன்மை தரவரிசையில் இந்தியாவுக்கு 140-ஆவது இடம்
சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் வெளி யிட்டுள்ள உலகப் போட்டித்தன்மை தரவரிசையில் கடந் தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா 3 இடங்களை இழந்து பின்தங்கியுள்ளது. 1989ஆம் ஆண்டு முதல் இந்த உலகப் போட்டித்தன்மை ரேங்கிங் வெளியிடப்பட்டு வருகிறது. நீண்ட கால வளர்ச்சிக்காக உலக நாடுகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை மனதில் வைத்து இந்த ரேங்கிங் உருவாக்கப்படுகிறது. இந்த தரவரிசையில், 143-இல் இருந்து 140-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா, வணிகத் திறன், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
அயோத்தி போல காசி, மதுராவிலும் மசூதிகளை இடிப்போம்: பாஜக
“இந்து மதத்தை வெறுக்கும் கட்சியாக காங்கிரஸ் இருக்கி றது. முஸ்லிம்களை தங்களின் தூரத்து உறவினர் களைப் போல காங்கிரஸ் எண்ணி வருகிறது. முஸ்லிம்களே இல்லை என்றால் காங்கிரஸ் என்றோ அழிந்து போயிருக்கும். கர்நாடகாவில் காங்கிரஸ் நிலைத்திருப்பதற்கு இங்குள்ள முஸ்லிம்களே காரணம். முகலாயர்கள் இந்து கோயில்களை இடித்துவிட்டு மசூதிகளை கட்டினார்கள். இப்போது காலம் மாறி விட்டது. மசூதிகளை இடித்துவிட்டு இந்துக் கோயில்களை கட்டு வதற்கான காலம் வந்துள்ளது. எங்கெல்லாம் இந்துக் கோயில் கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டதோ, அந்த மசூதிகள் அனைத்தும் இடிக்கப்படும். அயோத்தில் இப்போது நடைபெறு வதைப் போல காசி, மதுரா என அனைத்து இடங்களிலும் இது நடைபெறும்” என்று கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா பகிரங்க அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
‘பாஜகவின் முகத்திரையைக் கிழிப்போம்’
“எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், நான் மெகபூபா முப்தி பக்கத்தில் அமர்ந்தது பற்றி பாஜக விமர்சிக்கிறது. எதிர்க்கட்சி கள் கூட்டத்தில் நான் வேண்டுமென்றேதான் மெகபூபா முப்தி அருகில் போய் அமர்ந்தேன். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்படாது என்ற நிபந்தனை யுடன் பாஜக தங்களுடன் கூட்டணி அமைத்ததாக மெகபூபா முப்தி என்னிடம் கூறினார். நீங்கள் (பாஜக) மெகபூபாவுடன் கூட்டணி அமைத்த போதே இந்துத்துவாவை விட்டு வெளியேறி விட்டீர்கள். உங்கள் போலி இந்துத்வா முகத்திரையை கிழிப்போம்” என்று சிவ சேனா (உ.பா.தா.) தலைவர் உத்தவ் தாக்கரே காட்டமாக கூறி யுள்ளார்.
காங்கிரசுடன் ரகசிய உறவா?: பசவராஜ் பொம்மை அலறல்
“சில தினங்களுக்கு முன், மாநிலத்தின் மூத்த தலைவரும் எனது உறவினருமான சாமனூர் சிவசங்கரப்பாவை அவ ரது வீட்டிற்குச் சென்று உடல் நலம் விசாரித்தேன். அவர் காங்கி ரஸ் கட்சியில் இருக்கிறார் என்பதால் சந்திக்காமல் தவிர்க்க முடி யுமா?; கடந்த 2 நாட்களுக்கு முன் துணை முதல்வர் டி.கே. சிவ குமார் எனது வீட்டிற்கு வந்து பேசினார். அவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் என்பதால் வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அப்படி கூறினால் அரசியல் நாகரிகமா?; அதேநேரம் நான் எந்த சூழ்நிலையிலும் பாஜக தலைமைக்கு துரோகம் செய்ய மாட்டேன்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
முதலில் மணிப்பூரைப் பாருங்கள்: ராஜ்நாத் சிங்கிற்கு ராகல் சத்தா பதிலடி
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதே ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை என்றும், பஞ்சாப் மாநில அரசு சட்ட ஒழுங்கை காக்கத் தவறிவிட்டதாகவும், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்திருந்தார். “இந்நிலையில், அமைச்சர் (ராஜ்நாத் சிங்) முதலில் மணிப்பூர் எரிந்து கொண்டி ருப்பதையும், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிற்பதையும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதையும் கவனிக்க வேண்டும்; மற்ற மாநிலங்களைச் சுட்டிக்காட்டும் முன் மணிப்பூர் வன்முறைக்கு முதலில் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா பதிலடி கொடுத்துள்ளார்.
மோடி போன்று பொய் பேசும் பிரதமரை நான் பார்த்ததில்லை: சித்தராமையா
“எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நரேந்திர மோடியைப் போன்று பொய்பேசும் பிரதமரை பார்த்த தில்லை. 2014-ஆம் ஆண்டு அவர் வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என்றார், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றார், நல்ல நாட்கள் வரும் என்று பேசினார். இதில் ஏதாவது நடந்ததா?. நாடு இதுவரை கண்டி ராத பொய்யர் நரேந்திர மோடி. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றியால் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறைந் துள்ளது. கர்நாடக பாஜக அரசு ஊழலில் மூழ்கி, மோடியின் கவர்ச்சியை நம்பியிருந்தது. ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்யானது” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா, மகாராஷ்டிர மாநிலம் சாங்லி நகரில் பேசியுள்ளார்.
கெஜ்ரிவால் மீது காங்கிரஸ் புகார்
“கெஜ்ரிவால்... ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் ஆத ரவை கேட்கிறார். மற்றொரு பக்கம் ராஜஸ்தானில் மாநில முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் போன்ற தலை வர்களுக்கு எதிராக பேசி வருகிறார். எங்களுடன் கைக்கோர்க்க விரும்புகிறாரா? அல்லது விலகி நிற்க விரும்புகிறாரா?. அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூட எங்களுக்கு எதிரான அறிக்கை யை கொடுத்தார். எதிர்க்கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் இருந்தது ஒற்றுமைக்காக அல்ல, ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக. ஒற்று மையை குலைக்கும் நோக்கத்துடனே கூட்டத்திற்குச் சென்றார்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் விமர்சித்துள்ளார்.
நாட்டின் 80% பகுதிகளில் பருவமழை துவங்கியது!
புதுதில்லி, ஜூன் 26- நாட்டின் 80 சதவிகிதப் பகுதி களில் பருவமழை தொடங்கியுள்ள தாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சுமார் 62 ஆண்டுகளுக்குப் பின் மும்பை, தில்லியில் ஒரே நேரத்தில் பருவமழை தொடங்கி யுள்ளது. ஜூன் 21, 1961-க்குப் பிறகு முதன்முறையாக தில்லி மற்றும் மும்பை ஆகிய இரு நகரங்களி லும் ஞாயிற்றுக்கிழமை பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது. மேலும் ஹரியானா, சண்டி கர் மற்றும் தில்லியில் பருவமழை யானது இன்னும் தீவிரமடைய வாய்புள்ளதாக தெரிவிக்கபட்டுள் ளது.
விரைவு பேருந்துகளில் கட்டணச் சலுகைகள்
சென்னை,ஜூன் 26- அரசு விரைவு பேருந்துகளில் தொடர் பயணம் மேற்கொள் வோருக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை திட்டங்களின் கீழ் சுமார் 10 ஆயிரம் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக விரைவு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் கூறியதா வது:- அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சொகுசு, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 1,078 பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்துகள் 300 கி.மீட்டருக்கு மேற்பட்ட நீண்ட தூரப் பயணத்துக்காக 251 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. விரைவு பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்க பல்வேறு பயணச் சலுகை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஊருக்குச் சென்று திரும்புவதற்கான பயணச் சீட்டுகளை ஒரே நேரத்தில் இணைய வழியில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 விழுக்காடு சலுகை வழங்கப்படுகிறது. ஒரு மாதத்தில் 5 முறை பயணம் செய்வோருக்கு அடுத்த ஒவ்வொரு பயணத்துக்கும் கட்ட ணத்தில் 50 விழுக்காடு சலுகையாக வழங்கப்படுகிறது. இவ்வாறான திட்டங்கள் மற்றும் சேவைகள் காரணமாக விரைவு பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதி கரித்து வருகிறது. சேவையை மேம்படுத் துவது மற்றும் நவீனவசதி கொண்ட பேருந்துகளை இயக்குவது தொடர் பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
காலை உணவுத்திட்டத்தில் சிறுதானியங்களை சேர்க்க அறிவுறுத்தல்
சென்னை,ஜூன் 26- முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைக்கப் பட்டது. இந்த திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது. காலை உணவாக காய்கறிகள் சேர்த்து ஊட்டச்சத்துடன் வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி அல்லது ரவை, கோதுமை ரவை, சேமியா வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளூரில் அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக் கான பருப்பு 15 கிராம், உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் சேர்க்க வேண்டும். 150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறி யுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தது. 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்க கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப் பட்ட காலை உணவு வழங்க பரிந்துரைக் கப்பட்டுள்ளது.
மேட்டூரில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர்,ஜூன் 26 காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு திங்களன்று (ஜூன் 26) மாலை முதல் வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 94.100 அடியாகும்.