ஜெனிவா, ஜூன் 23- உலகின் பல்வேறு பகுதி களில் போர் மற்றும் மோதல் கள் காரணமாக 11 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்ட தாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் சூடானில் ஏப்ரல் மாதத்தில் இருந்து மட்டும் 2 மில்லியன் மக்கள் அகதிகளாக மாறியுள்ளதாக ஐநா அகதிகள் ஆணையர் பிலிப்போ கிராண்டி தெரி வித்தார். ஐநா அகதிகள் அமைப்பின் 2022 உலகளா விய போக்குகள் அறிக்கை யை அவர் வெளியிட்டார். 2022இல் மட்டும் 1.9 கோடி மக்கள் வெளியேற வேண்டியிருந்தது. இதில், 1.1 கோடி பேர், ரஷ்யா-உக்ரைன் போர் காரண மாக, தங்கள் நாட்டை யும், வீட்டையும் விட்டு வெளி யேற வேண்டியிருந்தது. காங்கோ, எத்தியோப்பியா மற்றும் மியான்மர் ஜன நாயகக் குடியரசில் உள் நாட்டுப் போர்கள் மில்லி யன் கணக்கான மக்களை வீடற்றவர்களாக ஆக்கி யுள்ளன. கலவரத்தின் பின்னர் இடம்பெயர்ந்தவர்களில் 35 சதவிகிதம் பேர் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந் துள்ளனர். 38 லட்சம் அகதிகள் துருக்கியிலும், 34 லட்சம் அகதிகள் ஈரானிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். அந்த அறிக்கையின்படி கடந்த ஆண்டு 57 லட்சம் உக்ரைனியர்கள் போர் கார ணமாக பல்வேறு நாடுக ளுக்கு இடம்பெயர்ந்துள்ள னர்.