states

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - பெரம்பலூர் முதலிடம்

சென்னை,மே 19- தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.39 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு தேர்வு  முடிவுகளை வெள்ளியன்று (மே 19) காலை 11 மணிக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யா மொழி வெளியிட்டார். மொத்தம் தேர்வு  எழுதிய 9,14,320 மாணவர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.39 விழுக்காடாகும்.  இது கடந்த 2022 ஆம் ஆண்டைக் காட்டிலும் 1.32  விழுக்காடு கூடுதல் தேர்ச்சியாகும். மாணவர்களை விட மாணவிகள் (4,30,710) 6.50 விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் (4,04,904) விழுக்காடு 88.16 ஆகும். பெரம்பலூர் மாவட்டம் 97.67 விழுக்காடு தேர்ச்சியுடன்  முதலிடத்தை பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.53 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்று 2 ஆம் இடத்தையும், விருதுநகர் மாவ ட்டம் 96.22 விழுக்காடு தேர்ச்சியுடன் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.  பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத் தார். இதேபோன்று, பத்தாம் வகுப்பி லும் சாதனை படைப்பார்கள் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு வரும் முழு மதிப்பெண்ணான 500க்கு 500 எடுக்கவில்லை.

புதுவையில் குறைந்தது தேர்ச்சி விகிதம்!

புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் நாடு அரசின் பாடத் திட்டம் கடைப் பிடிக்கப்படுகிறது. இதனால் தேர்வும், முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளி யிடப்படுகிறது. அதன்படி வெளியிடப் பட்டன. புதுவையில் 7,797 மாணவர் கள், காரைக்காலில் 7,618 மாணவர்கள் என 15,415 மாணவர்கள் தேர்வு எழுதி னர். இதில் 13,738 மாணவர்கள் மட்டுமே  தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவையில் தேர்ச்சி விகிதம் 89.12 விழுக்காடாகும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த முறை 3.8 விழுக்காடு குறைந்துள்ளது. 

11 ஆம் வகுப்பில் 90.93 விழுக்காடு தேர்ச்சி

தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்ட த்தில் 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள்  வெள்ளியன்று (மே 19) பிற்பகல் 2 மணிக்கு வெளி யிடப்பட்டன. இதன்படி, மொத்தம் தேர்வு எழுதிய 7,76,844 மாணவர் களில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி விகிதம் 90.93 விழுக்காடா கும். இதிலும் மாணவிகள் 7.37 விழுக் காடு அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி விழுக்காடு 94.36. மாண வர்களின் தேர்ச்சி விழுக்காடு 86.99 ஆகும். 

100க்கு 100 மதிப்பெண்!

ஆங்கிலம் 89, கணிதம் 3,649, அறி வியல் 3,584, சமூக அறிவியல் 320 பேர் சதமடித்துள்ளனர். ஆனாலும் தமிழ் பாடத்தில் ஒருவரும் 100க்கு 100 மதிப் பெண்கள் எடுக்கவில்லை. 11 ஆம் வகுப்பில் தமிழில் 9 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தி யுள்ளனர். ஆங்கிலத்தில் 13 பேரும், இயற்பியலில் 400, வேதியியலில் 107,  உயிரியலில் 65, கணிதத்தில் 12 மாண வர்களும் முழு மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர். 

100 விழுக்காடு தேர்ச்சி

இந்த பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகள் 87.45 விழுக்காடும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 விழுக் காடு தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் சுயநிதி பள்ளிகள் 97.38 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. பெண்கள் பள்ளி கள் 94.38 விழுக்காடு, ஆண்கள் பள்ளி கள் 83.25 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 3,718 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 1,026 அரசுப் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள், சிறைவாசிகள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 264 சிறை வாசிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி னர். இவர்களில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், 10,808 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர்.  11 ஆம் வகுப்பில் மொத்தம் 125 சிறை வாசிகள் தேர்வு எழுதியதில் 108 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திற னாளி மாணவர்கள் 5,709 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 5,709 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். 

துணைத் தேர்வு தேதி அறிவிப்பு!

தற்போது வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி பெறா தவர்களுக்கு துணைத் தேர்வுக்கு மே 23 ஆம் தேதி முதல்  27 ஆம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம்  என்றும் இதற் கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், 11 ஆம்  வகுப்பு மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு தாங்கள் படித்த பள்ளிகளில் மே 24  முதல் 27 வரைக்கும் விண்ணப்பிக்க லாம்.