states

சென்னையில் ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்பு

விருதுநகர், ஜூன் 6-  சென்னை கதீட்ரல் சாலையில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசுக்கு சொந்த மான நிலம் தனிநபரிடம் இருந்து மீட்கப் பட்டது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  தமிழக வருவாய்- பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  தெரிவித்தார். அப்போது அமைச்சர் மேலும் கூறிய தாவது: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே,  கதீட்ரல் சாலையில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான நிலம் 23 ஏக்கர் நிலம் இருந்தது. அவ்வி டத்தை கடந்த 1910 ஆம் ஆண்டு தோட்டக் கலை சங்கத்திற்காக தமிழ்நாடு அரசு வழங்கி யது. காலப்போக்கில்  தோட்டக்கலை சங்கம்  தனி நபர்  ஆக்கிரமிப்பில் சென்று விட்டது.  இதை அறிந்த அப்போதைய முன்னாள் முதல்வர்  கலைஞர்   கடந்த 1989 ஆம் ஆண்டு  17 ஏக்கர் நிலத்தை சட்டப்படி மீட்டெடுத்தார். பின்பு அந்த இடத்தில் 2009 ஆம் ஆண்டு செம்மொழிப் பூங்கா உருவாக்கப்பட்டது.   மீதமுள்ள நிலத்திற்கு  கிருஷ்ணமூர்த்தி என்ற தனிநபர், பட்டா பெற்று வைத்தி ருந்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் சட்டப்போராட்டம் நடத்தினார். இதையடுத்து,  உச்சநீதிமன்ற உத்தர வின்படி நில நிர்வாக ஆணையரால் விசா ரணை செய்யப்பட்டது. முடிவில், சென்னை  மாவட்டம், மயிலாப்பூர் வட்டம், கதீட்ரல் சாலையில் உள்ள 5 ஏக்கர் 18 கிரவுண்ட் 1683 சதுரஅடி சர்க்கார் புறம் போக்கு என  வகைப்பாடு கொண்ட நிலம்  அரசு வசம்  மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் தற்போ தைய சந்தை மதிப்பு சுமார் ரூ.1000 கோடி யாகும்.   இதுபோன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்கள் மீட்கப்பட்டு வரு கின்றன. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட அரசு நிலங்கள் அனைத்தும் வரு வாய்த்துறை மூலம் மீட்டெடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

;