கவுன்சிலர்களை வளைக்க தெருவில் திரியும் கெஜ்ரிவால் ஏஜென்டுகள்: பாஜக
புதுதில்லி, டிச.11 தில்லி மாநகராட்சிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள மன்ற உறுப்பினர் களை பாரதிய ஜனதா கட்சி விலைக்கு வாங்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பா.ஜ.க தனது “இழி விளை யாட்டுகளில்” இறங்கியுள்ளது என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி தலைவரும் மாநிலங்களைவை உறுப்பினருமான சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், தில்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலை யில் மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்ட மன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் நடத்தி கேவலமான நடவடிக்கையில் இறங்கிய பாஜக, தில்லி ஆம் ஆத்மி உறுப்பினர்களையும் விலை பேசுகிறது. பல மாநிலங்களில நடத்திய குதிரை பேரத்தை தில்லியிலும் பாஜக பயன்படுத்தப்பார்க்கிறது.
மிரட்டல், பணத்தின் மூலம் ஜனநாயகத்தை படு கொலை செய்து, மக்களின் தீர்ப்பை அவமதிக்க முயற்சிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்கு மாறு தில்லி காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. பாஜக ஒரு வெட்கமற்ற கட்சி எங்களை விட 30 இடங்களை குறைவாக பெற்றாலும், மேயர் நாங்கள்தான் எனக் கூறுகின்றனர் என்றார். மேலும் அவர் கூறுகையில், யோகேந்திர சந்தோலியா என்பவர் ஷர்மா என்பவரை அழைத்து, பாஜக மாநிலத் தலைவர் ஆதேஷ் குமார் குப்தா பேச விரும்புவதாகக் கூறியுள்ளார்; ஆதேஷ் குப்தாவும் பாஜக-வினரும் தேர்வு செய்யப்பட்ட ஆம் ஆத்மி உறுப்பினர்களை வாங்குவதற்கு ரூ.100 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தயாரித்துள்ளனர் என்றார் இதனிடையே பாஜக உறுப்பினர் களை, ஆம் ஆத்மி கட்சி தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஏஜென்டு கள், உறுப்பினர்களை வளைத்துப் போட தில்லி தெருக்களில் சுற்றித் திரி கிறார்கள் என்று பாஜக குற்றம்சாட்டி யுள்ளது.