states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ரூ.115 கோடியில் 10 பேருந்து நிலையங்கள் 

 சென்னை,டிச.16- தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து  நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி  ஒதுக்கீடு செய்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற புதிய பேருந்து நிலையங்கள் கட்டும் பணியை தமிழக அரசு செய்து வருகிறது. இதன் படி மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையங்கள் கட்டுப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 புதிதாக பேருந்து நிலை யங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நகராட்சி நிர்வாக துறை மூலம் நடவடிக்கை எடுக் கப்படவுள்ளது. இதில் திரூப்பூரில் ரூ.26 கோடியிலும் ஓசூரில் ரூ.30 கோடியிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும் அரியலூர், வேதாரண்யம், மதுரை  மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல்,  பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சி களிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

ரூ.81 கோடியில்  பேனா சின்னம்:   பதிலளிக்க உத்தரவு

சென்னை,டிச.16- முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் மெரினா கடற்கரை யில் உள்ள அவரது நினைவிடத்துக்கு அருகே கடலில் 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.81 கோடியில் 42 மீட்டர் உயரத்திற்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க தடை விதிக்க கோரி  திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுக்கள் வெள்ளியன்று (டிச.16) விசாரணைக்கு வந்தபோது, 8 வாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்கள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த னர்.

நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்

 தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,டிச.16- அரசின் பல்வேறு வகை யான நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசின் நிதித் துறை அறிவித்துள்ளது. அரசின் பல்வேறு மானி யங்கள் மற்றும் நலத்  திட்டங்களைப் பெறுவ தற்கு ஆதார் எண்ணை கட்டா யமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வரு கிறது. சமீபத்தில் தமிழகத் திலுள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும்  விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் இணைப்பு எண்ணை தங்களது ஆதா ருடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசின் நிதித்துறை அறிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு துணை அங்கீகார பயனர் முகமையாக கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் மூலம் பல்வேறு வகையான மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை அளிக்க வேண் டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பழங்குடி பட்டியலில் நரிக்குறவர்,  குருவிக்காரர்கள்: முதல்வர் வரவேற்பு

சென்னை,டிச.16- பழங்குடியினர் பட்டி யலில் நரிக்குறவர், குருவிக் காரர்களை இணைக்கும் மசோதா நிறைவேற்றப் பட்டிருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றி ருக்கிறார். பழங்குடியினர் பட்டி யலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தி னரை சேர்க்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங் களவையில் வியாழனன்று (டிச.15) ஒருமனதாக நிறை வேற்றப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் சமூக  வலைதளங்களில் வெளி யிட்டுள்ள பதிவில், “நரிக் குறவர் மற்றும் குருவிக் காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். தொடர் முயற்சிகளின் விளைவாக, இதற்கான சட்டவரைவு நிறைவேற்றப்பட்டிருக்கும் முக்கியமான நடவடிக் கையை வரவேற்கிறேன். நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர் சமூகங்களின் கண்ணியமான வாழ்க் கையை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

அச்சமூட்டும் ஆய்வுகளை நிறுத்துக!

கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

சென்னை, டிச. 16 - ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடைபெறும் ஆய்வுகளை நிறுத்த வேண்டுமென்று இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் துணைத் தலைவர் மனோகரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், சம்மேளன கவுரவத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, பொதுச் செயலாளர் டி.குமார், பொருளாளர் டி.லூர்துரூபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை முடக்கும் வகையில் கேஸ் சிலிண்டர், சொந்த வீடு, நிலம், விவசாயம், 100 நாள் வேலை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு  செய்வதை கைவிட வேண்டும். நலவாரிய கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவு செய்ய  வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.