இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 1,861 வழக்குகள் பதி வாகி உள்ளன. 2019-ஆம் ஆண்டில் 772, 2020-ஆம் ஆண்டில் 476, 2021-ஆம் ஆண்டில் 613 வழக்கு களும் பதிவாகியுள்ளன என ஒன்றிய தொழிலாளர், வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் ரமேஸ்வர் தெளி நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திங்களன்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல் தேர்வான தமிழ் மொழித்தாள் தேர்வை 50,674 மாணவ-மாணவிகள் எழுதவில்லை என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிரிண்டரா கிராமத்தில் ஐஎஸ் தீவிரவாத ஆதரவு ஏடிஎப் குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். கடந்த வாரம் கிரிண்டரா கிராமத்திற்கு அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் இதே ஏடிஎப் குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா - தென் கொரிய ராணுவ கூட்டுப்பயிற்சி (மார்ச் 13-23 வரை) தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரிய ராணுவம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 2 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரிய அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து மாசு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் வராகநதி ஆற்று நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு குடியேறுவதற்காக சாண்டியாகோ அருகே பிளாக் கடற்கரை பகுதியில் வந்து கொண்டி ருந்த 2 கடத்தல் படகுகள் கவிழ்ந்ததில் 8-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் கண்டு பிடிக்கப்பட்ட லித்தியம் இருப்பு பகுதி தொழில் முறைக்காக ஏலம் விடப்படும் என்று ஒன்றிய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“அரசு வேலைக்காக போலி சாதிச்சான்று அளித்து இடஒதுக்கீட்டு கொள்கையைச் சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது பெருமைக்குரிய ஒன்றாக உள்ளது” என பழங்குடி யினர் வகுப்பைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழை ரத்து செய்ததை எதிர்த்து பாலசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட் டத்திற்கு ஏப்ரல்1-ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.