states

‘தானிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவை விலக்குவது முறையானதல்ல’

புதுதில்லி, செப். 10- ரஷ்யாவை தனிமைப்படுத்தி விட்டு, கருங்கடல் தானிய ஒப்பந்த த்தை புதுப்பிக்கும் எந்தவொரு முயற்சியும் முறையானதல்ல என துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் புது தில்லியில் ஜி20 உச்சிமாநாடு முடிவடைந்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். உக்ரைன் - ரஷ்யா போரைத் தொடர்ந்து ரஷ்யாவில் உற்பத்தி  செய்யப்படும் உணவு தானியங் கள் மற்றும் உரங்களை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய விடாமல் பல்வேறு தடைகள் போடப்பட்டுள்ளது. அதே வேளையில் உக்ரைன் நாட்டில் இருந்து  தானியங்கள் பிற  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனு மதிக்கப்படுகிறது என கூறி, கடந்த ஜூலையில் ரஷ்யா ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தானிய ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து விவாதிக்கப் போகின்றன என்று எர்டோகன் கூறினார். ரஷ்யா ஏழை நாடுகளுக்கு தொடர்ந்து இலவச தானியங்களை அனுப்ப தயாராக உள்ளது, அதற்கு  துருக்கியும்  கத்தாரும்  ஆதரவாக உள்ளன என்றும் அவர் கூறினார். இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முயற்சிகள் தொடர்பாக ஜி20 உச்சி மாநாட்டின் போது  ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் துருக்கிய ஜனா திபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.