states

அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று ‘கோவிட்’ தயார் நிலை ஒத்திகை

சென்னை,டிச.26- சீனாவில் ‘பி.எப்.7’ வகை வைரஸ்  தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று மூலம் கடுமையான பாதிப்பு ஏற்படலாம் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. சீனாவிலிருந்து வந்தவர்களால் குஜராத், ஒடிசா மாநிலங்களிலும் இந்த புது வகை தொற்று கண்டறி யப்பட்டதால் ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது. எதிர்பாராத வகையில் அசாதாரண சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்காக செவ்வாயன்று (டிச.27) அனைத்து மாநிலங்களிலும் அவசர கால ஒத்திகை நடத்தும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் எடுக்கப்போகும் அவசர கால ஒத்திகை பற்றி மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கூறியதாவது:- தற்போது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1.25 லட்சம் படுக்கைகள் உள்ளன. இதில் 72 ஆயிரம் படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டது. 2021-ல் 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கும் அளவுக்குத்தான் வசதிகள் இருந்தன. இப்போது 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கும் வகையில் கட்ட மைத்து தயார் நிலையில் உள்ளது. 3 மாதங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. மருத்துவ துறைகளுக்கு தேவைப்பட்ட கவச உடை, முககவசங் கள் அனைத்தும் தயாராக உள்ளது. ஒன்றிய அரசின் அறிவுரையின்படி டிச.27 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி, ஆக்சிஜன் கையி ருப்பு, தயாரிக்கும் வசதிகள் உள்ளிட்ட  அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இதுபற்றிய அறிக்கையை 12 மணி நேரத்துக்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும். ஓமந்தூரார் அரசு மருத்து வமனையில் நானே ஆய்வு நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.