states

img

வீதியில் நடப்பதற்கான உரிமைப் போராட்டத்தின் நூற்றாண்டு

வைக்கம், டிச. 12 - வைக்கத்தில் புதுப்பிக் கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூல கத்தை, கேரள முதல்வர் பின ராயி விஜயன் தலைமையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.axவைக்கம், டிச. 12 - வைக்கத்தில் புதுப்பிக் கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூல கத்தை, கேரள முதல்வர் பின ராயி விஜயன் தலைமையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி மற்றும் கேரள - தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயி ரக்கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

வீதியில் நடப்பதற்கான உரிமைப் போராட்டம்

கேரள மாநிலம் வைக்கத்தில் ஸ்ரீமகாதேவர் ஆலயத்தின் வெளிப்புறச் சாலையில் நடந்து செல்லும் உரிமை கூட, ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோ ருக்கு மறுக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக ஈழவர் சமு தாயத்தைச் சேர்ந்த வழக்கறி ஞர் மாதவன், கேசவ மேனன், டி.கே. மாதவன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்  முதலான பலர் போராடி னர். மேலும், இவர்களின் அழைப்பின் பேரில், 1924  ஏப்ரல் 13 முதல் சத்தியா கிரகத்தை தலைமை ஏற்று நடத்திய தந்தை பெரியார் 4 மாதம் சிறைத்தண்டனையும் பெற்றார். தொடர்ந்து போராட்டம் வெற்றிபெற்றது.

நூற்றாண்டு கண்ட வைக்கம் வெற்றி

இந்த வைக்கம் போரா ட்டத்தின் வெற்றி, நூற்றா ண்டு காண்பதையொட்டி, கடந்த ஆண்டு வைக்கம் வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வைக்கம் நகரில் உள்ள தந்தை பெரியார் நினைவிடம் மற்றும் நூல கத்தை சீரமைக்க ரூ. 8.14  கோடி நிதி ஒதுக்கீடு செய் தார். அதன்படி வைக்கத் தில் தந்தை பெரியார் நினை வகம் மற்றும் நூலகம் தமிழக அரசால் நிறுவப்பட்டது.

இதன் திறப்பு விழா, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் வியாழனன்று நடை பெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, பெரியார்  நினைவகம் மற்றும்  நூலகத்தை வைக்கத்தில் திறந்து வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வைக்கம் விருது பெற்ற கன்னட எழுத்தாளர் தேவ னுரா மகாதேவன் பாராட்டப் பட்டார்.

அமைச்சர்கள் - அதிகாரிகள் பங்கேற்பு

கேரள கூட்டுறவுத்துறை - துறைமுக - தேவாஸ்வம் அமைச்சர் வி.என்.வாசவன், மீன்வளத்துறை - பண்பாட்டு - இளைஞர் நலத்துறை அமைச்சர் சஜி செரியன், தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் க. துரைமுரு கன், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கே. பிரான்சிஸ் ஜார்ஜ் எம்.பி., சி.கே. ஆஷா  எம்எல்ஏ, கேரள அரசு தலை மைச் செயலர் சாரதா முரளி தரன், தமிழக அரசின் தலை மைச் செயலர் என். முருகா னந்தம், மாவட்ட ஆட்சியர் ஜான்.வி. சாமுவேல், வைக்கம் நகராட்சித் தலை வர் பிரீதா ராஜேஷ், நக ராட்சி கவுன்சிலர் ராஜசேக ரன் ஆகியோர் பேசினர்.