states

img

சத்தீஸ்கர் சுரங்க விபத்து: 7 பேர் பலி

சத்தீஸ்கர் சுரங்க விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல் புரி அருகே மல்கான் கிராமப்பகுதியில் சுண்ணாம்பு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மண் சரிவில் சிக்கிய 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

;