பனாஜி, ஜூலை 11- கோவாவில் 2022-ஆம் ஆண்டின் துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 11 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் முக்கிய எதிர்க் கட்சியானது. தேர்தலின் போது முதல் வர் வேட்பாளராக அறிவிக் கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திகம்பர் காமத் தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந் தார். ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த மைக் கேல் லோபோ எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட் டார். அப்போது முதலே திகம்பர் காமத் காங்கிரஸ் மேலிடத்தின் மீது அதிருப்தி யில் இருந்து வந்தார். இந்நிலையில் கோவா சட்டப்பேரவை பட்ஜெட் கூட் டத்தொடரையொட்டி, காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில் திகம்பர் காமத் உட்பட 7 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. அவர் கள் 7 பேரும் பாஜக-வில் இணைய உள்ளதாக தக வல் வெளியானது. மறுபுறத் தில் மைக்கேல் லோபோவும் பாஜகவுடன் பேசி வருதாக தகவல் வெளியானது. இதை யடுத்து., எதிர்க்கட்சித் தலை வர் பதவியில் இருந்து மைக் கேல் லோபோவை காங்கி ரஸ் நீக்கியது. இதனிடையே பாஜக வில் சேர காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்களுக்கு ரூ. 40 கோடி வரை பேரம் நடப்ப தாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிரிஷ்சோடங்கர் குற்றம் சாட்டியுள்ளார். தொழிலதிபர்கள் மற்றும் நிலக்கரி மாபியா ஆகியோர் மூலம் இந்த பேரம் நடப்ப தாகவும் அவர் கூறியுள்ளார்.