states

img

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் இன்று கடற்படையில் இணைகிறது

கொச்சி, செப். 1- முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்ப லான விக்ராந்த் வெள்ளியன்று (செப்.2) நாட்டுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலை 9 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி  கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த பிறகு, ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ என பெயரிடப்பட்ட கப்பல் கடற்படையின் ஒரு பகுதியாக மாறும். மேல் தளத்தில் 10 போர் விமானங்களை யும், கீழ் தளத்தில் 20 போர் விமானங்களை யும் நிலைநிறுத்த வல்லது விக்ராந்த். கட்டுமான செலவு ரூ.20,000 கோடியாகும். 2009 ஆம் ஆண்டு கட்டுமானப் பணியைத் தொடங்கிய இந்தக் கப்பலுக்கு, 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கியப் பங்காற்றிய இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலின் பெயர் சூட்டப்பட்டது.

போர் சோதனை

இயக்கப்பட்ட பிறகு, கப்பல் பணியா ளர்கள் பொறுப்பேற்பார்கள். கமடோர் வித்யாதர் ஹர்கே தற்போது கப்பலின் மூத்த அதிகாரியாக உள்ளார். இறுதி சோதனைக்காக விக்ராந்த் கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா கடற்படை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப் படும். மேற்கு கடற்படை கட்டளையின் கீழ், போர் விமானங்கள் ஒரு வருடத்திற்கு புறப்படவும் தரையிறங்கவுமான சோதனை களுக்கு உட்படுத்தப்படும். அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் விக்ராந்த் முழுமையாக செயல்படத் தொடங்கும்.

விக்ராந்த் 2 க்கு வாய்ப்பு

விக்ராந்தை நிர்மாணம் செய்த கொச்சி கப்பல் கட்டும் தளம், பொதுத்  துறையில் தொழில்நுட்பச் சிறப்பு மற்றும் செயல்திறனுக்கான அடையாளமாக மாறி யுள்ளது. அதன் தொடர்ச்சியாக விக்ராந்த்-2  கூட இங்கு உருவாக வாய்ப்புள்ளது. இத்திட்டம் ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளது. விக்ராந்த் கட்டுமானமானது கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் உள்கட்ட மைப்பை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும் உதவியது. கட்டுமான பணிக்கு தலைமை தாங்கிய 100 பொறியாளர்களில் 20 பேர் பெண்கள் என்பதும் பெருமைக்குரியது.