திருவனந்தபுரம், அக்.26- கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அம்மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழக துணை வேந்தர்களை பதவி விலக வலியுறுத்தியும், மாநில உரிமை களில் அத்துமீறிய தலையீட்டைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அக்டோபர் 25 செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக் கழகங்களை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் ஆளுநரின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்தும், தனியார்மயமாக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் முழக்கமிட்டனர். வாலிபர் சங்க திருவனந்தபுரம் மாவட்டக் குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை மாநிலத் தலைவர் வி.வாசிப் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் வி. அனூப் தலைமை வகித்தார். திரு வனந்தபுரம் மாவட்டத்தின் அனைத்து வட்டார மையங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆசிரியர் அமைப்புகள்
சங்பரிவார நிகழ்ச்சி நிரலை பல்கலைக்கழகங்களில் நடைமுறைப் படுத்த துணைவேந்தர்களை ஜன நாயக விரோதமாக பதவி நீக்கம் செய்யும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் கண்டன பேரணி நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆசிரி யர் அல்லாதோர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். பேராசிரியர். சுனில் பி இளையிடம் துவக்கி வைத்தார்.