கொச்சி, நவ.13- கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் எர்ணா குளம் விருந்தினர் மாளிகையில் சந்தித்த னர். மாநில அரசுக்கு எதிரான ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து விஎச்பி தலைவர்களும் மனு அளித்தனர். ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு விஎச்பி மாநிலத் தலைவர் வி.ஜி.தம்பி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், உறவு முறை சலுகையை ஒழிக்க ஆளுநர் முயற்சிப்பதால் அவருக்கு ஆதரவு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கேரள பொது சுகாதார மசோதாவில் இந்து மதத்திற்கு எதிரான குறிப்பு உள்ளதாகவும், அதை நீக்க வேண்டும் என்றும், மதம் மாறிய பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி யினருக்கு இடஒதுக்கீட்டின் பலன்களை மறுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் இருந்து கைரளி மற்றும் மீடியா ஒன் செய்தி தொலைக்காட்சி களின் செய்தியாளர்களை வரவழைத்து அவமதிப்பு செய்து தடை விதித்த அதே விருந்தினர் மாளிகையில் கேரள ஆளுநர் சனிக்கிழமை மாலை விஎச்பி தலைவர் களை சந்தித்தார்.