திருவனந்தபுரம், நவ.3- நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள வழக்கில் ஆளு நர் மீண்டும் ஒரு விசித்திர மான நடவடிக்கையை எடுத்துள்ளார். பதவி விலகச் சொல்லப்பட்ட பல்கலைக் கழக துணைவேந்தர்களின் சம்பளத்தை திரும்பப் பெற ஆளுநர் ஆரிப் முகமது கான் புதிய நடவடிக்கை மேற் கொண்டுள்ளார். தொழில்நுட்ப பல்க லைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் இதர ஒன் பது பல்கலைக்கழக துணை வேந்தர்களும் ராஜிநாமா செய்யுமாறு ஆளுநரால் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கார ணம் காட்டுவதற்கான நோட் டீசும் வழங்கப்பட்டது. நோட் டீசுக்கு தடை கோரி உயர் நீதி மன்றத்தை துணைவேந் தர்கள் அணுகியுள்ள நிலை யில் சம்பளத்தை திரும்பப் பெறுவதற்கான நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்களின் சம்பளத்தை அவர்கள் நியமனம் செய்யப்பட்ட காலத்திலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்பது ஆளுநரின் யோசனை. விதி களை மீறி பணி நியமனத் துக்கு வழங்கப்பட்ட ஊதி யம் முறையற்றது என்றும், எனவே அதனை வசூலிக்க வேண்டும் என்றும் வாதி டப்பட்டது. காரணம் அறிவிப் புக்கான காலக்கெடு வியா ழக்கிழமையுடன் முடிவ டைந்த போதிலும், துணை வேந்தர்கள் யாரும் எழுத் துப்பூர்வமாக பதிலளிக்க வில்லை. சம்பளம் வழங்கு வது தொடர்பாக அதிகா ரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ராஜ்பவனில் இருந்து தெரி யவந்துள்ளது. ஆனால், சம்பளத்தை திரும்பப் பெறுவதற்கான எந்த ஏற்பாடும் விதிகளில் இல்லை என்பது நிபுணர் களின் கருத்து. பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்ற கேரள பல்கலைக்கழக துணை வேந்தர் மகாதேவன் பிள்ளை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். பணி செய்த காலத்தில் பெற்ற சம்ப ளத்தை திரும்பப் பெறுவ தற்கான ஏற்பாடும் யுஜிசி விதி முறைகளில் குறிப்பிடப்பட வில்லை.