states

img

கேரளத்தில் ரயில் மோதி விபத்து

சேலம்,நவ.3- கேரளத்தில் ரயில் மோதிய விபத்தில் சேலத்தைச் சேர்ந்த  4 ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் பலியாகினர். கேரளாவின் பாலக்காடு மாவட்டம் ஷோரனூரில் பாரதப்புழா ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் ரயில்வே தடங்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. எதிர்முனையையும் மறுமுனையையும் சரியான நேரத்தில் அடைய முடியாமல், தண்டவாளத்தில் சிக்கியவர்கள் மீது ரயில் மோதியது. இதில்  நான்கு தொழிலாளர்களும் பலியாகினர்.  3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.  4ஆவது நபரை தேடும் பணி தொடர்கிறது. ஆற்றில் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருப்பதால் சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற குழுவினர் தொடர்ந்து தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பலியாகியவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன், வள்ளி, ராணி மற்றும் மற்றொரு லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது. இதனால்  அவர்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அடிமலைப்புதூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.