states

img

பட்ஜெட்டில் கேரளத்துக்கு எதிராக கடும் பாகுபாடு

“ஒன்றிய அரசு அனைத்து வகையிலும் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது என்றும், இது தேசிய பட்ஜெட் என்று கூற முடியாது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே. ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தான் விரும்பியவர்களுக்கு உதவுவது, மற்றவர்களை நிராகரிப்பது மற்றும் அழுத்தத்திற்கு அடிபணிவது போன்ற அணுகுமுறையை ஒன்றிய பட்ஜெட்டில் பார்க்க முடிகிறது. அதேபோல, சில அழுத்த  யுக்திகளைப் பயன்படுத்திய சில மாநி லங்கள், சில பலன்களைப் பெற்றுள்ளன. கேரளம் போன்ற மாநிலங்கள் முற்றிலும் புறக் கணிக்கப்பட்டுள்ளன. கேரளம் பல்வேறு பேரிடர்களை சந்தித்து முன்னேறி வருகிறது.  பொருளாதார ரீதியில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறது. இதனால் குறைந்தபட்சம் ரூ.24,000 கோடி கூடுதல் தொகுப்பு வழங்க வேண்டும் என கேரள அரசு ஏற்கனவே கோரியிருந்தது. திங்களன்று நாடாளுமன்றத்தின் பூஜ்ஜிய நேரத்தில் கேரளம் சந்திக்கும் அவலங்கள் குறித்து விரிவாகப் பேசி எழுத்துப்பூர்வமாக மனு கொடுக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட்டின் அறிவிப்பின் பொழுது ஒன்றிய அரசின் அணுகுமுறை என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. பல மாநிலங்களை வெள்ளத்தில்  இருந்து காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கூட உதவிய ஒன்றிய  அரசு, கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களைப் புறக்கணிக்கிறது. இது அழுத்தத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய பட்ஜெட் ஆகும். சில வெவ்வேறு நோக்கங் களுக்காக பட்ஜெட் பயன்படுத்தப்படு கிறது. எங்களுடன் நிற்காதவர்கள் பாதிக்கப் படுவார்கள், புறக்கணிக்கப்படுவார்கள், எதுவும் கொடுக்க மாட்டோம் என்பதை பட்ஜெட் காட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக கேரளத்தின் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பல ஆண்டுகளாக நாங்கள் கேட்டும் அனைத்து திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. குறைந்த பட்சம் இந்த முறையாவது மாற்றம் இருக்கும் என்று நினைத்தோம். கேரளத்தில் பாஜகவுக்கு எந்த இடமும் இல்லை என்று ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் இம்முறை கேரளத்தைச் சேர்ந்த சுரேஷ் கோபி பாஜக சார்பில் எம்.பி. இருக்கின்ற பொழுதிலும் கேரளத்தை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவில்லை. முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை. கேரளம் வளர்ச்சிக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது. அதேபோல், நலத்திட்ட ஓய்வூதியங்களுக்கும் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவிடப்படுகிறது. ஜிஎஸ்டி பங்கை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. எய்ம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை கேரளம் கோரியது. இதை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. தங்களுக்கு விருப்பமானவர்களுக்கும், தங்களை ஆதரிப்போருக்கும் மட்டுமே பட்ஜெட்டை பயன்படுத்துவோம் என்பதை இந்த பட்ஜெட் மூலம் ஒன்றிய அரசு நிரூபித்துள்ளது” என அவர் கூறினார்.