திருவனந்தபுரம்,ஆக.14- வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இதில் 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், 2 லட்ச ரூபாய் முதல்வரின் துயர் துடைப்பு நிதியில் இருந்தும் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல காய மடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு முகாம்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் இருந்து வாடகை வீடு களுக்குச் செல்லும் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வரை வாடகை யாக கேரள அரசு வழங்கும்; நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச தங்கும் இடங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. அந்த இடங்களில் தங்க வாடகை வசூலிக்கப்படாது” எனவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில அரசின் அமைச்சரவைக் கூட்டத்திற் குப் பிறகு முதல்வர் பின ராயி விஜயன் செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப் போது, இந்த நிவாரண அறி விப்புகளை வெளியிட்ட அவர், மேலும் கூறிய தாவது:
நிச்சரிவால் பாதிக்கப் பட்ட முண்டக்கை, சூரல் மலை, சாலியாறு ஆகிய வற்றை மையமாக கொண்டு 7 பகுதிகளாக பிரிந்து காணா மல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
ஞாயிறன்று நடந்த வெகுமக்கள் தேடுதலில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். முகாம்களில் இருப்போர்களுக்காக அரசு கட்டிய 100 வீடுகள், தனியார் வசம் இருந்து 200 வீடுகள் தயாராக உள்ளன. உறவினர் வீடுகளுக்குச் செல்லும் குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 6 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்த தொகை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
60 சதவிகிதத்துக்கு மேல் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 75 ஆயிரமும், 40 முதல் 50 சத விகிதம் உடலில் குறை பாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்; படுகாய மடைந்தவர்களுக்கு கூடுதலாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அவசர நிதியுதவியாக ரூ. 10 ஆயிரம் வழங்க அரசால் உத்தரவிடப்பட்டது. வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த இருவருக்கு நாளொன்றுக்கு ரூ. 300 வீதமும், மருத்துவமனையில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வரும் படுக்கை நோயாளிகள் அல்லது நோயாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு ரூ. 300 வீதம் 30 குடும்பங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்விச் சான்றிதழ், அரசு அடையாள அட்டை கள் உள்ளிட்டவை மீண்டும் வழங்க அனைத்து துறைகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. வாரிசுச் சான்றிதழ் இல்லாமலேயே இழப்பீட்டு தொகையை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 231 உடல்களும் 206 உடல் உறுப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேப்பாடியில் 151 உடல்களும், நிலம்பூரில் 80 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மேப்பாடியில் 39 உடல் உறுப்புகளும், நிலம்பூரில் 172 உடல் உறுப்புகளும் கண்டெடுக்கப்பட்டன.
இதுவரை மீட்கப்பட்ட அனைத்து உடல் பாகங்கள் மற்றும் இறந்த உடல்களுக்கான கூராய்வு நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட 178 உடல்களும் 2 உடல் உறுப்பு களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப் படும்.” இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
ரூ.10 ஆயிரம் உடனடி உதவி அமைச்சர் கே.ராஜன் பேட்டி
கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே. ராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “பேரிடரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் பணி ஆகஸ்ட் 13 செவ்வாயன்று தொடங்கப்பட்டது. வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்தப்படும். பாஸ் புத்தகத்தை தொலைத்துவிட்டு கணக்கு எண் நினைவில் இல்லாதவர்கள் எந்த வங்கியில் கணக்கு உள்ளது என்று தெரிவித்தால் பணம் டெபாசிட் செய்யலாம். எந்த வங்கியில் கணக்கு உள்ளது என்பது நினைவில் இல்லை என்றால், முகவரியின் அடிப்படையில் வங்கிகளை சரிபார்த்து கணக்கு கண்டுபிடிக்கப்படும். பூஜ்ஜிய இருப்புடன் புதிய கணக்கு தொடங்கும் வசதியும் வழங்கப்படும்.
குடும்பத்தில் உள்ள இருவருக்கு 30 நாட்களுக்கு தலா ரூ. 300 வழங்கும் முடிவு தற்காலிக மறுவாழ்வுக்குப் பிறகு செயல்படுத்தப்படும். முகாம்களில் இருந்து திரும்பியவர்கள் வேலையில்லாமல் இருக்கும் போது வாழ்க்கைச் செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. குடும்பத்தில், நீண்டகாலமாக சிகிச்சை பெறுபவர்கள் அல்லது உள்நோயாளிகள் இருந்தால் அவர்களும் இந்த உதவியைப் பெறலாம்.
எஸ்டிஆர்எப் (மாநில பேரிடர் நிவாரண நிதி) விதிமுறைகளின்படி, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 30 நாட்களுக்கு மட்டுமே உதவி வழங்க அனுமதிக்கப்படுகிறது. 90 நாட்களுக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மற்றும் ஒன்றியக் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கினால் 90 நாட்கள் இத்தொகையை வழங்க முடியும்” என தெரிவித்தார்.