திருவனந்தபுரம், டிச.21- கேரள அரசு மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை சமூக நீதித்துறை மேற்கொள்ளும். ஆதர வற்றோர் இல்லக் கட்டுப்பாட்டு வாரியத் தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிறு வனங்களும் இதற்கான வசதிகளை செய்து தருவதாக சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்தார். இதற்கான உத்தேச திட்டம் தயாரிக்கும் பொறுப்பு சமூக நீதித் துறை முதன்மை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ஆதரவற் றோர் இல்லக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகப் பணியாளர்கள், சுகாதாரக் கல்வித் துறைத் தலைவர்கள் மற்றும் சமூக நீதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசால் நேரடியாக நடத்தப்படும் 16 முதியோர் இல்லங்களிலும், ஆதர வற்றோர்
இல்லக் கட்டுப்பாட்டு வாரியத் தால் அங்கீகரிக்கப்பட்ட 632 முதி யோர் இல்லங்களிலும் 29,767 பேர் தங்க லாம். தற்போது 17,801 பேர் உள்ள னர். அரசு முதியோர் இல்லங்களுக் கோ அல்லது மானியம்பெறும் இல்லங் களுக்கோ செல்லலாம். இங்கு வசதி இல்லை என்றால் வேறு முதியோர் தங்கும் இடங்களுக்கோ மாறலாம். மருத்துவ பதிவுகளை ஒப்படைக்க வேண்டும் மருத்துவமனை கண்காணிப்பா ளரின் வழிகாட்டுதலின்படி, குடி யிருப்பாளர்களை எடுத்துக் கொள்ளும் போது மருத்துவம் தொடர்பான ஆவ ணங்களையும் காப்பகங்களுக்கு வழங்க வேண்டும். பதிவேடுகளின் அசல், மருத்துவமனை கண்காணிப் பாளரால் பராமரிக்கப்படும். நகல் களை சமூக நீதித்துறை இயக்குன ருக்கும், தேவையான தகவல்களை ஆதரவற்றோர் இல்லக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் வழங்க வேண்டும். குடியிருப்பாளர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் மருந்து களை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்வார்கள்.