states

img

நிலையான வளர்ச்சிக் குறியீடு: கேரளம் மீண்டும் முதலிடம்

நிதி ஆயோக்கின் 2023-24 ஆம் ஆண் டிற்கான நிலையான வளர்ச்சிக் குறியீட்டில் கேரளம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 79 புள்ளி களுடன் கேரளத்துடன் உத்தரகண்ட் மாநி லமும் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 78 புள்ளிகளுடனும், கோவா 77 புள்ளி களுடனும் அடுத்தடுத்து உள்ளன. இந்தி யாவின் நிலையான வளர்ச்சி குறியீடு 66இல் இருந்து 71 ஆக உயர்ந்துள்ளது.

2020-21 இல் வெளியிடப்பட்ட நிலை யான வளர்ச்சிக் குறியீட்டில் 75 புள்ளி களுடன் கேரளா முதலிடம் பிடித்தது. புதிய வளர்ச்சிக் குறியீட்டில் மேலும் நான்கு புள்ளிகளை உயர்த்தி கேரளா சாத னையை மீண்டும் செய்தது. சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம், சமத்துவ மின்மை, எரிசக்தி, தொழில், சுற்றுச் சூழல், சுத்தமான நீர் உள்ளிட்ட 16 வளர்ச்சி இலக்குகளை கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. யூனி யன் பிரதேசங்களில் சண்டிகர் முன்னிலை வகிக்கிறது. ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் தில்லி ஆகிய யூனியன் பிரதேசங்கள் அடுத்த இடத்தில் உள்ளன.

பீகார் 57 புள்ளிகளுடன், ஜார்க்கண்ட் 62 புள்ளிகளுடன், நாகாலாந்து 63 புள்ளி களுடன் பின்தங்கியுள்ளன. 16 வளர்ச்சிக் குறியீடுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் தெரிவித்தார்.