states

img

38 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3.36 கோடி ஒதுக்கீடு

திருவனந்தபுரம், நவ.24- சபரிமலை பயணத்தை எளிதாக்க சிறப்பு உதவி நிதியாக 6 நகராட்சி களுக்கும் 32 கிராம பஞ்சாயத்து களுக்கும் ரூ.3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.2.31 கோடியும், நகராட்சிகளுக்கு ரூ.1.05 கோடியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தெரி வித்துள்ளார். உட்கட்டமைப்பு மேம்பாடு, சுகா தாரம் மற்றும் சாலைகள் பராமரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் நிதி ஒதுக்க லாம். யாத்திரை பாதையை அழகாக வும், குப்பையில்லாமலும் வைத்து, பக்தர்களுக்கு வசதி செய்து தர,  உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும் என அமைச்சர் தெரி வித்தார். பத்தனம்திட்டா மாவட்டத்தில் 17 ஊராட்சிகள், கோட்டயம் மாவட்டத் தில் 9 ஊராட்சிகள், இடுக்கி மாவட்டத் தில் 6 ஊராட்சிகளுக்கு உதவித் தொகை  வழங்கப்படுகிறது.  செங்ஙனூர், பத்தனம்திட்டா, திருவல்லா, ஏற்றுமானூர், பாலா, பந்தளம் ஆகிய நகராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.