திருவனந்தபுரம், டிச. 6- கேரள பல்கலைக்கழகத்தின் கீழ் நடை பெற்ற 70 கல்லூரி மாணவர் சங்க தேர்தல்க ளில் 64இல் எஸ்எப்ஐ மகத்தான வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள 33 கல்லூரிகளில் 30 கல்லூரிகளிலும், கொல்லத்தில் 19இல் 18 இடங்களிலும், ஆலப்புழாவில் 16ல் 15 இடங்களிலும், பத்த னம்திட்டாவில் 2இல் 1 இடத்திலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. போதைப்பொருள் மாபியாவை வளர்த்து, எஸ்எப்ஐ ஊழியர்களைத் தாக்க அவர்களைப் பயன்படுத்திய கேஎஸ்யு-எம்எஸ்எப் கூட்டணிக்கு எதிரான மாண வர்களின் பாதுகாப்பாகவும் இந்தத் தேர்தல் அமைந்தது. பாகுபாடற்ற மாணவர், போ ராட்டம் சார்ந்த கல்லூரி என்ற முழக்கத்தை எழுப்பி எஸ்எப்ஐ இந்த தேர்தலை எதிர் கொண்டது. எஸ்எப்ஐயின் வரலாற்று வெற்றிக் காக அயராது உழைத்த மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாநில தலைவர் கே.அனுஸ்ரீ, செயலாளர் பி.எம்.அர்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.