திருவனந்தபுரம், நவ.14- போதைப்பொருள் ஒழிப்புப் பிரச்சா ரத்தின் இரண்டாம் கட்டப் போராட்டம் குழந்தைகள் தினமான நவம்பர் 14 திங்க ளன்று துவங்கியது.தொடர்ச்சியாக குடியரசு தினம் வரை விரிவான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திங்களன்று காலை 11 மணிக்கு முதல்வரின் குழந்தை கள் தின செய்தியுடன் பிரச்சாரம் துவங்கி யது. இது கைட் விக்டர் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.அனைத்து கல்வி நிறு வனங்களிலும் இச்செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கலால்- பொதுக் கல்வித் துறை மற்றும் விமுக்தி மிஷன் தயாரித்த “விடி யலை முன்னறிவிப்போர்” என்ற விழிப்புணர்வு புத்தகத்தையும் முதல்வர் வெளியிட்டார்.இந்நூல் 5 முதல் 12 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு ஆனது.ஆங்கி லம், கன்னடம், தமிழ், இந்தி மற்றும் ஆதி வாசி மொழிகளில்வெளியாக உள்ளது.இந்த நூல் போதைக்கு எதிரான செய்தி யாக 65 லட்சம் குடும்பங்களை சென்றடை யும். திங்களன்று ஒவ்வொரு வகுப்பறை யிலும் போதைக்கு எதிரான ஒரு வகுப்பு நடத்தப்படும். கடந்த எட்டாம் தேதி நடந்த உயர்மட்ட கூட்டத்தில் இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டது.போதைக்கு எதிரான கலால் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் தொடரும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தெரிவித்தார்.
இரண்டு கோடி இலக்கு
உலகக் கோப்பை கால்பந்து உற்சாகத்தையும் போதைக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்படும்.இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ‘கோல் சவால்’புதனன்று (நவ.16) தொடங்குகிறது.இதன் இலக்கு இரண்டு கோடி கோல் அடிப்பதே.இதன் மாநில அளவிலான விழாவை புதன்கிழமை மாலை திருவனந்த புரத்தில் முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைக்கிறார்.அனைத்து பள்ளிகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், வார்டுகள், குடும்பஸ்ரீ அலகுகள் மற்றும் பொது இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.முதல் கட்டமாக ஒரு கோடி மக்களைத் திரட்டி போதைக்கு எதிரானமனிதச்சங்கிலி அமைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.