திருவனந்தபுரம், ஜுன் 19- பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி யினர் வசிக்கும் பகுதிகளுக்கு காலனி, ஊர், சங்கேதம் போன்ற பெயர்களை பயன் ன்படுத்தக் கூடாது என வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
கேரள அரசின் பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பதவி விலகும் முன்பு இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு ஆவணங்களில் காலனிகள் இனி ‘நகர்’ என்று அழைக்கப்படும். ஊர், சங்கேதம் என்பதற்குப் பதிலாக உன்னதி (உயர்வு), பிரகிருதி (இயற்கை) என்கிற வார்த்தைகளை பயன்படுத்தலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பினராயி அரசு பதவிக்கு வந்தவுடனேயே காலனி என்ற பதம் அவமதிப்பை ஏற்படுத்துவதால் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அய்யன்காளியின்
நினைவு நாளில்...
உள்ளூரில் பிரபலமான பெயர்களாக வும் இருக்கலாம். தனிநபர்களின் பெய ரிடப்பட்ட இடங்கள் அப்படியே அறியப் படும். இருப்பினும், தகராறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், தனி நபர்களின் பெயர்களை தவிர்ப்பது நல்லது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கும் சமூகம் காலனித்துவ காலத்தின் நினைவுகளை சுட்டிக்காட்டும் பெயர்களை தொடரக்கூடாது என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் மனித உரிமை களை நிலைநாட்டப் போராடிய மகாத்மா அய்யன்காளியின் 83ஆவது ஆண்டு நினைவு நாளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பால்...
இந்த உத்தரவை பிறப்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், காலனி என்ற வாச கம் இழிவானது. “காலனி என்பது அடிமைத் தனத்தைக் குறிக்கும் சொல். அத னால்தான் அந்த வார்த்தை கைவிடப் பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக, கேரள அரசு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சிதான் இந்தப் பெயர் மாற்றம். இதனால் மட்டுமே சமூக உயர்வு ஏற்பட்டுவிடாது. ஒட்டுமொத்த சமுதாயத்தினரின் ஒத்துழைப்பால் மட்டுமே பின்தங்கிய வகுப்பினரின் முன் னேற்றம் சாத்தியமாகும். இடதுஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) அரசு அதற்கு தேவையான அனைத்தையும் செய்யும்,’’ என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்கள வைத் தொகுதியின் உறுப்பினராக அண் மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முதல்வரிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஜுன் 18 செவ்வா யன்று ஒப்படைத்தார்.