ஆலப்புழா, அக்.27- தங்கள் ரத்தத்தைக் கொடுத்து, கேரளாவைக் கட்டி யெழுப்பிய வயலார் மாவீரர் களுக்கு கேரளமே அஞ்சலி செலுத்தியது. சர்.சி.பி.ராமசாமி ஐயரின் ராணுவத்தின் துப்பா க்கிகளுக்கு முன்னால் தேசபக் தர்கள் கொடிகள் உயர்த்திய மறக்க முடியாத போரின் 76 ஆவது ஆண்டு நினைவாக வய லார் கிராமமே சிவப்புக் கம்பளம் விரித்ததுபோல் சிவப்பணிந்து காணப்பட்டது. மாராரிகுளம் தியாகிகள் மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஏ.விஜய ராகவன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பன் னியன் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஆர்.நாசர், சிபிஐ மாவட்ட செயலர் டி.ஜே.ஏஞ்சலோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புன்னப்புரா, காட்டூர், மாராரி குளம், மேனச்சேரி, அவுதலா உள்ளிட்ட பகுதிகளில் போராடி இன்னுயிர் ஈந்தவர்களின் நினைவோடு, வயலார் தியாகி கள் தூக்கிப்பிடித்த புரட்சி உணர்வு எதிரொலித்தது. புன்ன ப்புரா சி.எச்.கணாரன் நினைவு தினமான 20ஆம் தேதி தொடங்கிய வயலார் வார விழா வயலார் தியாகிகள் தினமான வியாழனன்று நிறைவடைந்தது. புன்னப்புரா தியாகிகள் அடக் கம் செய்யப்பட்டுள்ள பெரிய சுடுகுடு தியாகிகள் மண்டபத் தில் இருந்து வியாழன் காலை 7.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.சுதா கரன் விளையாட்டு வீரர்களிடம் ஜோதியை ஒப்படைத்தார். பின்னர் மேனசேரி தியாகி கள் மண்டபத்தில் எஸ்.பாகுலே யன் குத்துவிளக்கு ஏற்றினார். இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பிற்பகலில் வயலார் சென்ற டைந்த ஜோதிகளை நினைவேந் தல் குழுத் தலைவர் என்.எஸ்.சிவபிரசாத் பெற்றுக் கொண்டு தியாகிகள் மண்டபத்தில்வைத் தார். ஏராளமானோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் மாலையில் நடந்தது.