states

img

சபரிமலை சீசன் கேரள அரசு விரிவான ஏற்பாடு

சபரிமலையின் அமைதியான சூழ்நிலையில், புகார்கள்  ஏதுமின்றி இந்த முறை சுமார் 2 லட்சம் பக்தர்கள் மலை ஏறினர். மண்டல மற்றும் மகரவிளக்கு உற்சவத்தின் முதல் நான்கு  நாட்களில், சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம்  மேலும் அதிகரித்தது. சபரிமலை நடை திறப்பு நாளான  நவம்பர் 16 அன்று 26,378 பேர் முன்பதிவு செய்து தரிச னத்திற்கு வந்தனர். உடனடி பதிவின் படி 30,000 பேர் வந்த னர். கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் மெய்நிகர் வரிசை (ஆன்லைன் கியூ) மூலம் முன்பதிவு செய்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிட்டனர். நவம்பர் 19 அன்று  72,000 பேர் வந்தனர். சுமார் ஐம்பதாயிரம் பேர் மதியத்திற்கு  முன்பே சன்னிதானத்தை அடைந்தனர். தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டதும் பக்தர்களுக்கு வசதியாக இருந்தது.

தேவசம் போர்டும் கேரள அரசும்

பம்பை முதல் சன்னிதானம் வரை பல்வேறு துறை களின் ஒருங்கிணைப்புடன் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆலோச னைக் கூட்டம் நடைபெறுகிறது. பக்தர்களின் கருத்துக்களை  தெரிவிக்க கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு அஞ்சல் ஐடி தொடங்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் ஆலோசனைகள் அமைச்சரால் நேரில்  ஆய்வு செய்யப்பட்டு குறைகள் களையப்படும். மலை ஏறு பவர்களுக்கு இலவச மருந்து, குடிநீர், உடல்நலக் குறைவு ஏற்பட்டோருக்கு மருத்துவ உதவிக்கு, அலோபதி, ஆயுர் வேதம், ஹோமியோபதி சிகிச்சை ஏற்பாடுகள் உள்ளன. அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது.

தூய்மைக்கு பாராட்டு

சபரிமலையில் நடக்கும் தூய்மை இயக்கத்தை பக்தர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். புண்ணியப் பூங்காவனம் திட்டம் மற்றும் தேவசம் துறையின் “புனித சபரிமலை” திட்டத்தின் கீழ் தூய்மைப் பணி வெற்றி பெற்றுள்ளது. தேவசம் அன்னதானம் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 30,000 பேருக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. சுத்தி கரிப்பு நிலையங்களில் இருந்து குடிநீர் விநியோகத்திற்காக 179 குழாய் இணைப்புகள் உள்ளன. சுக்கு, பதிமுகம், ராமச்சம் போன்றவற்றைச் சேர்த்து மருந்துத் தண்ணீர் தயாரிக்கப் படுகிறது. பக்தர்களின் பயணத்தின் போது 15 மையங்கள் தண்ணீர் வழங்க தயாராக உள்ளன.

ஓய்வெடுக்க 550 அறைகள்

சன்னிதானத்தில் பக்தர்களுக்கு ஓய்வெடுக்க 550 அறைகள் உள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். ஒரே நேரத்தில் 17,000 பேர் தங்கும் வசதி உள்ளது. பண்டித்தாவளம் மாகுண்டா, மாளிகபுரம், பெரிய நடை பாதை, பராமரிப்பு அலுவலகம் முன்பு இன்டர்லாக் போடப் பட்ட டிரின்கன்கள், விடுதி அலுவலகத்தில் உள்ள இன்டர்லாக் டிரின்கன்கள் என ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. சன்னிதானத்தில் உள்ள 1005 கழிப்பறைகளில் 885 இலவசம். அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு கழிப்பறை, குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்தது. சபரிமலை பக்தர்கள் சுமூகமாக தரிசனம் செய்ய அனைத்து வசதிகளையும் தேவசம்போர்டும், கேரள மாநில  அரசும் தயார் செய்துள்ளதாக சபரிமலை கோயில் தந்திரி கண்டரர் ராஜீவர் தெரிவித்துள்ளார். “சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கண்டிப்பாக வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பிளாஸ்டிக் கொண்டு வரக்கூடாது, குப்பை  போடக் கூடாது. பம்பை நதியில் துணியை வீசுவது, மாளிகப் புறத்துக்கு வெளியே மஞ்சள் தூள் வீசுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். இருமுடிக்கட்டில் அத்தியா வசியப் பொருட்களை மட்டும் கொண்டு வாருங்கள். இருமுடிக் கட்டில் பன்னீர், சந்தனம் போன்றவற்றை விலக்கி, கோயில் பிர சாதம் மட்டுமே கொண்டுவர வேண்டும்” என்று தந்திரி கூறினார்.