கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கத் தேவையான உதவிகள் கோரிய கேரளாவின் கோரிக்கைக்கு ஒன்றிய பாஜக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால் மறுவாழ்வுப் பணிகளை சீர்குலைக்கும் வகையிலும், பொய்யான செய்திகளைப் பரப்பும் ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர்.