states

img

அரசை இழிவுபடுத்தும் அரசியல் விளையாட்டு.... சுங்க அலுவலகங்கள் நோக்கி எல்டிஎப் பேரணி....

திருவனந்தபுரம்:
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரையும் எல்டிஎப் அரசாங்கத்தையும் இழிவுபடுத்த சுங்கத்துறை அரசியல் விளையாட்டை விளையாடுவதாக எல்டிஎப் கன்வீனர் ஏ.விஜயராகவன் தெரிவித்தார்.

சனியன்று, எல்டிஎப் ஊழியர்கள் சுங்கத்துறையின் முறைகேடுகளுக்கு எதிராக திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் உள்ள அதன் மண்டல அலுவலகங்களுக்கு பேரணி நடத்தினர். திருவனந்தபுரத்தில் அவர் பேசுகையில், சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளியின் அறிக்கையின் அடிப்படையில் சுங்கத்துறை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பாஜக மற்றும் யுடிஎப் அரசியல் பிரச்சாரத்தை சுங்கத்துறை எடுத்துக் கொண்டுள்ளது. எல்டிஎப்- ஐ அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாது என்று உறுதியாக நம்புகையில் சுங்கத்துறை இந்த அசிங்கமான நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த வேண்டும் என்று வி.விஜயரகவன் கேட்டுக்கொண்டார்.

;