திருவனந்தபுரம், டிச. 4- கேரளத்தில் குடும்ப அட்டை இல்லாத 7181 ஏழை கள் இருப்பதாக உள்ளாட் சித் துறை கண்டறிந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் 2023 ஜனவரியில் குடும்ப அட்டைகள் வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. தீவிர வறுமையை நிர்ண யம் செய்யும் நடவடிக்கை யின் ஒரு பகுதியாக, குடும்ப அட்டை இல்லாத, அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் வழங்குவதற்கான நடவ டிக்கையை உணவுத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. தேவையான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க நடவ டிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுத் துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் உத்தரவிட்டார். இதுதொடர்பாக, சனிக் கிழமை நடைபெற்ற ஆட்சி யர் கூட்டத்தில் அமைச்சர் அறிவுறுத்தினார். கேரளத்தில் குடும்ப அட்டை இல்லாத 7181 ஏழை கள் இருப்பதாக உள்ளாட் சித் துறை கண்டறிந்துள்ளது. ஆதார் அட்டை உள்ள 2411 பேரிடம் குடும்ப அட்டை இல்லை என்றும், 4770 பேரி டம் ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை இல்லை என்றும் கண்டறியப்பட்டது. ஆதார் அட்டைதாரர்களில் குடும்ப அட்டை இல்லாத 867 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. இறந்தவர்கள் மற்றும் ஊரில் இல்லாத வர்கள் தவிர எஞ்சிய 153 பேருக்கு விரைவில் குடும்ப அட்டைகள் வழங்கப்படும். ஆதார் அட்டை, குடும்ப அட்டை இல்லாதவர்களில் 191 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு குடும்ப அட்டை வழங்கப் பட்டுள்ளது. குடும்ப அட்டை பெற ஆதார் அட்டை கட்டா யம் என்பதால், மாவட்டம் தோறும் முகாம்கள் நடத்தி, ஏழை எளியவர்களுக்கு ஆதார் வழங்க அமைச்சர் பரிந்துரை செய்தார்.