states

img

போதைக்கு எதிரான நடவடிக்கைகளை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல பினராயி விஜயன் அழைப்பு

திருவனந்தபுரம், ஆக. 4- போதைப் பொருள் மாஃபியாக் களை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். சிறுவர்களை குறிவைக்கும் இத்தகைய கும்பல்களை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்றும் குறிப்பிட்டார். கேரளா யூத் லீடர்ஷிப் அகாடமி (கைலா)  மற்றும் கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் லோக்கல் அட்மினிஸ்ட்ரேஷன் (கிலா) இணைந்து நடத்தும் இளைஞர் பிரதிநிதி களுக்கான பயிற்சியான “யுவசக்தி”யின் நிறைவு விழாவை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் ஜனநாயக அமைப்பில் மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சம அந்தஸ்து உண்டு. உள்ளாட்சி மக்கள் பிரதி நிதிகள் இதில் பல கடமைகளை செய்ய  கடமைப்பட்டுள்ளனர். அதில் இளை ஞர்களின் உழைப்பு மிக முக்கியமானது. வெள்ளம் மற்றும் கோவிட் காலத்தில் இளைஞர்களின் பங்களிப்பை நாம் புரிந்து கொண்டுள்ளோம். சிறந்த நிர்வா கத்தை உருவாக்க இந்த செயலமர்வு உத வும். அறிவியல்பூர்வமான கழிவு மேலா ண்மைக்கு இளைஞர் பிரதிநிதிகளும் முனைப்பு காட்ட வேண்டும் என்றார் முதல்வர். கேரளத்தில் 30 வயதுக்குட்பட்ட சுமார்  1,000 மக்கள் பிரதிநிதிகளும், 25 வயதுக்குட்பட்ட சுமார் 1,600 மக்கள் பிரதிநிதிகளும் உள்ளனர். இவர்களுக்கு 12 குழுக்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தலைமை வகித்தார். கிலா இயக்குநர் டாக்டர். ஜாய் இளமன், வி.கே.பிரசாந்த் எம்.எல்.ஏ., எம்.டி.ஜம்ஷீர், டாக்டர். பசீலா, அர்ஜூன் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.