திருவனந்தபுரம், ஜுன் 3- இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டால், இனிமேல் இரவிலும் விசாரணை நடத்த கேரள காவல்துறை தலைவர் அனுமதி அளித்துள்ளார். இதுகுறித்து கேரள காவல்துறை தலைவர் அனில் காந்த் பிறப்பித்த உத்தரவில் கூறப் பட்டுள்ளதாவது: இரவிலும் திறம்பட விசாரணை நடத்த நிலைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டால் நான்கு மணி நேரத்திற்குள் விசாரணையை முடித்து உடலை கூராய்வுக்கு மாற்ற வேண்டும். சிறப்பு சூழ்நிலைகளில் விசாரணை நீண்ட நேரம் எடுக்கும் போது இது துல்லியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். விசாரணை நடத்தி உடலை கூராய்வுக்கு அனுப்புவதில் தாமதமோ, தடங்கலோ இருக்கக்கூடாது. தேவையான மின்விளக்கு வசதி, உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள், விசாரணை நடத்துவதற்கான இதர செலவுகள் போன்றவற்றை செய்து தர மாவட்ட காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுப்பார். இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க மாவட்ட காவல்துறை தலை வர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டார். ஏற்கனவே, திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மருத்துவக் கல்லூரிகளிலும், காசர்கோடு பொது மருத்துவமனையிலும் இரவில் பிரேதப் பரிசோதனை செய்ய அரசு முன்பு அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், தலைமைச் செயலாளரிடம் முடிவெடுக்க உத்தர விட்டது. உள்துறை கூடுதல் தலைமைச் செய லாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விசாரணை தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.