states

img

ஜனநாயக- அரசியல் விழுமியங்களைப் பாதுகாப்பதில் தேசாபிமானிக்கு முக்கிய பங்கு: சீத்தாராம் யெச்சூரி

திருவனந்தபுரம், ஜன.20- நாட்டை மதவாத பாசிச நாடாக மாற்றும் முயற்சிக்கு எதிரான போராட்டத்தில் தேசாபிமானி நாளிதழுக்கு முக்கியப் பங்கு உண்டு என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மலையாள மொழி ஏடான தேசாபிமானியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனவரி 19 அன்று நடைபெற்றது. விழாவைத்  துவக்கி வைத்து அவர் மேலும் கூறுகையில், “அரசியல் விடுதலையில் இருந்து சமூக மற்றும் பொருளா தார விடுதலைக்கு மாறுவது தவிர்க்க முடியாதது. ஜனநாயக மதச்சார்பற்ற விழுமியங்களை நிலைநிறுத்துவதில் தேசாபி மானிக்கு முக்கிய பங்கு உண்டு.  தேசாபிமானி பல்வேறு நெருக்கடி களை எதிர்கொண்டுவளர்ந்தது. இன்று சமூகக் கட்டமைப்பை மாற்றி  எழுதும் முயற்சி நடக்கிறது. சமூ கத்தை ஒரு புதிய திசையில் வழி நடத்தும் போது அதற்கு எதிரான அவ நம்பிக்கையை போக்கவேண்டிய கடமை தேசாபிமானிக்கு உள்ளது. நாட்டில் கார்ப்பரேட் - வகுப்பு வாத கூட்டு நிலைநிறுத்தப்பட்டுள் ளது. அதன் கோரத் தாண்டவம் தலை விரித்தாடுகிறது. நாட்டின் செல்வத் தில் பாதி, ஒரு சதவீதத்தினரிடம் உள்ளது. இந்த கூட்டணியானது பாசிசத்தின் விளிம்பை எட்டி நிற் கிறது. ஒன்றிய பாஜக அரசு இந்தியா வை அமெரிக்காவின் இளைய பங்கா ளியாக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவில் இருந்து  வாங்கும் எண்ணெய் அமெரிக்கா விற்கு வழங்கப்படுகிறது. இது  ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து, அதன் பங்காளியாக மாறியதன் அடையாளமாகும். கார்ப்பரேட்  - வகுப்புவாத சக்திகள் ஊட கங்களைப் பயன்படுத்துகின்றன.

இரண்டு பெரிய ஏகபோகங்கள் நாட்டின் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றன. வெறுப்பைப் பரப்பி பிளவுபடுத்த ஏகபோக ஊடகங்களும் முயற்சிக்கின்றன. கார்ப்பரேட் வகுப்புவாத கூட்டணிக்கு எதிராகப் போராடுவது காலத்தின் தேவை. இவர்கள் உருவாக்கும் போலி வரலாற்றை அம்பலப்படுத்த வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் தேசாபிமானி தனது 100ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில், பாசிச கார்ப்பரேட் சக்திகளை தோற்கடித்து, சோசலிச உலகை உருவாக்க முடியும்” என்று கூறினார். விழாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் எம்.வி.கோவிந்தன் தலைமை வகித்தார். கேரள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கானம் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆனாவூர் நாகப்பன், தேசாபிமானி தலைமை ஆசிரியர் புத்தலத்து தினேசன், பொது மேலாளர் கே.ஜே.தாமஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம், மேயர் ஆர்யா ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.