states

சில நேரங்களில் மட்டும் ‘கொதிக்கும்’ ஊடக ஆவேசம்!

திருவனந்தபுரம், பிப்.5- கேரள பட்ஜெட் மீதான  ஊடகங்களின் கண்மூடித் தனமான விமர்சனம் ஒரு தலைபட்சமானது என்ப தற்கு அண்மைக்கால வர லாறு சான்று. பலர் மாநிலத்தின் நிலை மையை புரிந்து கொள்ள வில்லை அல்லது எதிர்கா லத்தை கருத்தில் கொண்டு  பட்ஜெட்டில் உள்ள முன் மொழிவுகளை உணர வில்லை. செய்தித்தாள்கள் மற்றும் சேனல்கள் மலை யாள மொழியில் வெளி யிட்ட “அதிர்ச்சி, அடிமேல் அடி, தலைமேல் அடி, பகல்  கொள்ளை, கசக்கி பிழிந்து  வரி, வரித் தீ” போன்ற  தலைப்புச் செய்திகள் மக்க ளைச் சென்றடைந்தன. இரண்டு ரூபாய் செஸ்  மற்றும் பல ஆண்டுகளுக் குப் பிறகு திருத்தப்படும் முத்திரை தாள் மற்றும் பதிவுக் கட்டணங்களை முன்னிறுத்தியே இந்த தலைப்பு செய்திகளும், தலையங்கங்களும் வெளி யாகி உள்ளன. ஆனால், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகிய வற்றின் விலையை ஒன்றிய  அரசு தொடர்ந்து உயர்த்திய போது, இந்த வார்த்தை களை எந்த ஊடகங்களும் பேசவில்லை. எரிபொருள் வரியை 9 ரூபாயில் இருந்து  32 ரூபாயாக உயர்த்தி யுள்ளது மோடி அரசு. 400 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் 1200  ரூபாயானது. புத்தாண்டி லும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அப்போது அவை  ஒற்றைப் பத்திச் செய்தி களாக மட்டுமே இருந்தன. வருவாயை உயர்த்து வதற்கு மாநிலங்களுக்கு வரையறுக்கப்பட்ட வழி முறைகள் இருப்பதை அவர் கள் அறியாதவர்கள் அல்ல.  கட்டண உயர்வு கூடாது என்று தலையங்கம் எழுதிய ஊடகங்கள், சிறந்த பட்ஜெட் முன்மொழிவுகள் எதையும் கண்டதாககூட காட்டிக் கொள்ளவில்லை. பட்ஜெட் செய்திகளில் பெரும் பாலான உண்மைகளை மறைத்து, முற்றிலும் இடது சாரி எதிர்ப்பு என்ற பொய் களைப் பரப்புகின்றன.