திருவனந்தபுரம், டிச.18- திருவனந்தபரம் மாநகராட்சியின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட செயல்பாடுகளை ஒடிசாவைச் சேர்ந்த மேயர்கள் குழு பாராட்டியது. ஒடிசா அரசின் அறிவுறுத்தலின் பேரில் கேரளாவின் வளர்ச்சி சாதனை களை ஆய்வு செய்ய வந்த மேயர்கள் குழுவினர் மாநகராட்சி அலுவலகம் வந்து மேயர் ஆர்யா ராஜேந்திரனை சந்தித்தனர். புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்சனா தாஸ், துணை மேயர் மஞ்சுலதா கன்ஹர், பேராம்பூர் மாநகராட்சி மேயர் சங்கமித்ரா டேல், துணை மேயர் விவேக் ரெட்டி உள்ளி ட்ட 21 பேர் கொண்ட குழு டிச.17 சனிக் கிழமை திருவனந்தபுரம் வந்தது. இக்குழுவினர் சுகாதாரம், கல்வி மற்றும் நலத்திட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதித்ததுடன், இப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட செயல்பாடு களை பாராட்டினர். இக்குழுவினர் நகரின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மாநகராட்சியால் செயல்படுத்தப் படும் மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்துவார்கள். துணை மேயர் பி.கே.ராஜூ, பல்வேறு நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளு டன் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.