states

img

கேரளத்தில் 2 வாரங்களுக்கு இரவு ஊரடங்கு அமல்.... போக்குவரத்து தொடரும்... கல்வி கட்டணம் ரத்து....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் கோவிட் இரண்டாவது அலையிலிருந்து தற்காப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு வார இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பொதுப் போக்குவரத்து முடக்கம் இல்லை. ஆன்லைனில் மாணவர்களுக்கானவகுப்புகள் நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் கல்விகட்டணம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

\திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலாளர் டாக்டர் வி.பி.ஜாய் தலைமையில் திங்களன்று நடந்த கூட்டத்தில் செவ்வாய் (ஏப்.20) முதல் மாநிலத்தில் இரவுநேர ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முழுமையான மூடல்இல்லை. அத்தியாவசிய சேவைகளுக்கு  கட்டுப்பாடுகள் பொருந்தாது. முடிந்தவரை ‘வீட்டிலிருந்து வேலை’  செயல்படுத்தப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;