முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் திங்களன்று காலை 6 மணியளவில் 141.40 அடியாக உயர்ந்தது உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 142 அடியை எட்ட 1.60 அடி தண்ணீர் தேவையே உள்ளது. திங்களன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அணைக்கு 1,481 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், தமிழகம் 511 கன அடி தண்ணீரை எடுத்துக் கொண்டது. 24 மணி நேரத்தில் அணை பகுதியில் 16 மி.மீ., தேக்கடியில் 17.2 மி.மீ., மழை பெய்துள்ளது.