states

img

முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 141.40 அடி உயர்வு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் திங்களன்று காலை  6 மணியளவில் 141.40 அடியாக உயர்ந்தது உச்சநீதிமன்றம்  நிர்ணயித்த 142 அடியை எட்ட 1.60 அடி தண்ணீர் தேவையே உள்ளது.  திங்களன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  அணைக்கு 1,481 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், தமிழகம் 511 கன அடி  தண்ணீரை எடுத்துக் கொண்டது. 24 மணி நேரத்தில்  அணை பகுதியில் 16 மி.மீ., தேக்கடியில் 17.2 மி.மீ., மழை பெய்துள்ளது.