ஒன்றிய அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி கேள்வி
திருவனந்தபுரம், மார்ச் 19 - பொது நிதியை கொள்ளை அடிப் பவர்களுக்கு ஒன்றிய அரசு உடந்தை யாக இருப்பதாக கூறிய சீத்தாராம் யெச்சூரி, அதானி மீதான விசாரணை யில் தாமதம் ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். திருவனந்தபுரம் புத்திரிகண்டம் மைதானத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தலை மையில் நடைபெற்ற மக்கள் பாது காப்பு அணிவகுப்பு நிறைவுக் கூட்ட த்தை தொடக்கி வைத்து கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். அப்போது அவர் மேலும் பேசிய தாவது: மோடி ஆட்சியில் இந்தியப் பொரு ளாதாரம் அழிந்து வருகிறது. அதா னிக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை அறிவிக்க மோடி ஏன் தயங்குகிறார்? யாரேனும் விமர்சித்தால், அவர்கள் தேச விரோதிகளாகி விடுவார்கள்.
கேரளத்தின் 140 சட்டப்பேரவை தொகுதிகள் வழியாக நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் பாதுகாப்பு அணிவகுப்பில் நாட்டைப் பாதிக்கும் முக்கிய பிரச்ச னைகள் குறித்து விவாதிக்க முடிந்தது. கேரளாவை ஒன்றிய அரசு புறக்கணித்து வருவதை மக்கள் இந்த அணிவகுப் பின் ஊடாக அறிந்து கொண்டனர். இந்தி யாவின் அடிப்படைத் தூண்கள் தாக்கு தலுக்கு உள்ளாகின்றன. இந்தியப் பொருளாதாரம் அழிந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மறைக்க நிறைய இருக்கிறது. பொது நிதியை கொள்ளை அடிப்பவர்களுக்கு ஒன்றிய அரசு உடந்தையாக உள்ளது. தங்களது கூட்டுக் களவாணிகளை மோடி அரசு பாதுகாக்கிறது. கேரள அரசு மாற்றுக் கொள்கை களை முன்னெடுத்துச் செல்கிறது.கேரளாவுக்கு குடியரசு தலைவர் வழங்கிய பாராட்டே மோடிக்கும் அமித்ஷாவுக்கும் பதிலாகும். இந்தியக் குடியரசுத் தலைவரே கேரள அரசுக்குச் சான்றிதழை வழங்கியுள்ளார்.
கேள்வி கேட்டால் அவர்களை தேச விரோதிகளாக்கும் மோடி அரசின் அணு குமுறைக்கு எதிரான போராட்டம்தான் இந்த அணிவகுப்பு. 140 கோடி இந்தி யர்களின் ஆதரவு தனக்கு இருப்ப தாக கூறும் மோடியின் பிரச்சாரம் கேலிக் குரியது. கடந்த தேர்தலில் வாக்களித்த வர்களில் 37 சதவீதம் பேர் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித் துள்ளனர். மானியத்தின் கீழ் வழங்கும் உணவு தானியங்களை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இந்த விசயத்திலும் மோடி மக்களை தவறாக வழிநடத்து கிறார். 80 கோடி மக்களுக்கு இலவச உணவு வழங்க வேண்டிய நிலை உள்ளது என்பதே அரசின் மீதான குற்றச்சாட்டு தான். மானியம் ரத்து செய்யப் பட்ட உண்மை மறைக்கப்படுகிறது. அர சியல் சாசன வழிமுறைகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது. இதற்கு ஆளுநர்கள் பயன்படுத்தப் படுகின்றனர். நரேந்திர மோடி தவ றான பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.