states

கேரள ஆளுநர் மிரட்டல்

திருவனந்தபுரம், அக்.17- ஆளுநரை விமர்சித்தால் அமைச்சர் பதவியை ரத்து செய்வேன் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மிரட்டல் விடுத்துள்ளார். ஆளு நருக்கு ஆலோசனை கூறலாம், விமர்சிக்க முடியாது. விமர்சித்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார் என ஆளுநர் ட்விட்டரில் தெரிவித்துள் ளார். ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் முழு உரிமை உண்டு. ஆனால், ஆளுநர் பதவி யின் கண்ணியத்தை கெடுக்கும் வகை யில் அறிக்கைகள் வெளியிடப் பட்டால், அமைச்சர் பதவியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் ட்வீட் செய்துள்ளார். ஆளுநரின் அறிக்கை யை ராஜ்பவன் பிஆர்ஓ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். ஞாயிறன்று கேரள பல்கலைக்கழக செனட்டில் இருந்து 15 செனட்டர்களை ஆளுநர் திரும்பப் பெற்றார். அரசியல் சாசனத்திலோ, இந்திய நீதி அமைப்பிலோ இல்லையென் றாலும், ஆளுநர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதுதான் ஆளு நரின் சர்ச்சைக்குரிய கருத்து. ஆளுநர் அலுவலகத்தில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஒரு பாஜக பிரமுகர் இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ளதாகக் கூறப்படு கிறது

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: பிடிடி ஆச்சாரி

இந்நிலையில் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அமைச்சர் பதவியை ரத்து செய்ய ஆளுநருக்கு  அதிகாரம் இல்லை என்று மக்கள வை முன்னாள் பொதுச் செயலாளர் பிடிடி ஆச்சாரி கூறினார். அரசமைப்புச் சட்டம் ஆளு நருக்கு அவ்வாறு செய்ய அதிகாரம் அளிக்கவில்லை. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில்தான் இது போன்ற விஷயங்களில் ஆளுநர் முடிவெடுக்க முடியும் என்று பிடிடி ஆச்சாரி கூறினார். ஆளுநரை விமர் சித்தால் அவரது அமைச்சர் பதவியை  ரத்து செய்வேன் என கேரள ஆளு நர் ஆரிப் முகமது கான்  ட்வீட் செய்த தற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். 

சிபிஎம் கடும் கண்டனம்

இந்நிலையில், கேரள ஆளுநர், ஆரிப் முகமது கான், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நியமனம் செய்யப் பட்ட நபர் போன்றே நடந்துகொள்ள வில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சாடியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,  “அமைச்சர்கள் ஆளுநர் அலு வலகத்தின் கண்ணியத்தைக் குறைக் கும் விதத்தில் அறிக்கைகள் வெளி யிட்டால் அது ஆளுநரின் மகிழ்ச்சிக்கு  எதிரானது; நடவடிக்கை எடுக்க முடி யும் என்று, கேரள ஆளுநர் அலுவல கம் கூறியுள்ளது. இதன் பொருள் ஆளுநர் ஓர் அமைச்சரை ‘டிஸ்மிஸ்’ செய்ய முடி யும் என்பதாகும். இத்தகைய சர்வாதி காரமான அதிகாரங்கள் அரசமைப்புச் சட்டத்தால் ஆளுநருக்கு அளிக்கப் படவில்லை. இத்தகைய அறிக்கை களை வெளியிடுவதன்மூலம் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், அவருடைய அரசியல் சார்பு நிலையுடன் இடது ஜனநாயக முன் னணி அரசாங்கத்திற்கு எதிராக இருப் பதை வெளிப்படுத்தி இருக்கிறார். குடியரசுத் தலைவர் இதில் தலை யிட்டு, இத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத, ஜனநாயக விரோத  அறிக்கைகளை வெளியிடுவதி லிருந்து கேரள ஆளுநரைத் தடுத்திட வேண்டும்” என வலியுறுத்தி யுள்ளது.