ஹவானா, ஜூன் 16- விளையாட்டு, சுகாதாரம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கேரளா வுடன் இணைந்து செயல்படப் போவதாக கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனல் தெரிவித்தார். சமூக முன்னேற்றத்தில் கேரளாவின் சாத னைகள் முன்மாதிரியானவை. டிஜிட்டல் பல் கலைக்கழகம் உட்பட பல்கலைக் கழகங்களுக்கு இடையே தொழில்நுட்ப தொடர்பு மற்றும் மாண வர் பரிமாற்றம் போன்றவற்றில் கேரளாவுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக கியூபா அமைச்சரவை விவாதிக்கும் என்றார். முதல்வர் பினராயி விஜயனுடனான சந்திப்பின்போது, அடுத்த முறை இந்தியா வரும்போது கேரளா வுக்கு வருவேன் என்றும் அவர் தெரிவித்தார். கியூபாவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மிகுவல் டியாஸ் கேனலுக்கு முதலமைச்சர் பினராயி வாழ்த்து தெரி வித்தார். கியூபாவின் மீது கேரளத்தின் ஆழ்ந்த பாசத்தையும், புரட்சி வீரர்களான பிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா மீதான மரியாதையையும் அவர் கியூப ஜனாதிபதியிடம் தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டு சர்வதேச கியூபா ஒற்றுமை மாநாட்டிற்காக ஹவானாவிற்கு சென்றதையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்தார். வர்த்தகம், கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதார சேவைகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு முக்கியமாக சாத்தியமாகும். கேரளா முதன்மையாக விளையாட்டு மற்றும் பொது சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில் கியூபாவின் சாதனைகள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கியூபா உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்துத் துறையிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தத் துறைகளில் கேரளாவுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதல்வர் விளக்கினார். சுகாதார நிபுணர்களுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வாலிபால், ஜூடோ, தடகளம் ஆகியவற்றில் கியூபாவின் சாதனைகள் அதிகம் விவாதிக்கப்பட்டன. இந்தத் துறைகளின் ஒத்துழைப்பு கேரளாவின் விளையாட்டுத் துறையில் பாய்ச்சலுக்கு உதவும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். கேரளாவின் வர்த்தகம் மற்றும் கல்வித்துறையில் முன்னேற்றம் அடைய தேவையான ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒரு விரிவான, அன்பான மற்றும் ஆக்கப்பூர்வமான உறவை உருவாக்க கேரளா முயற்சிப்பதாக பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் தர கியூப ஜனாதிபதி உறுதியளித்தார். அமைச்சர்கள் கே.என்.பாலகோபால், வீணா ஜார்ஜ், திட்டக் குழும துணைத் தலைவர் வி.கே.ராமச்சந்திரன், ஜான் பிரிட்டாஸ் எம்.பி., தலைமைச் செயலர் வி.பி.ஜாய், சிறப்புப் பணி அதிகாரி வேணு ராஜாமணி, சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஏ.பி.எம்.முஹம்மது ஹனிஷ் உள்ளிட்டோர் குழுவில் இருந்தனர்.