states

img

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்கள் தள்ளுபடி

கேரள மாநிலம் வயநாடு மாவட் டத்தின் முண்டக்கை நிலச் சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட வர்களின் கடன்களை தள்ளுபடி செய் வது குறித்து கணக்குகளை ஆய்வு செய்யுமாறு வங்கிகளுக்கு மாநில அளவி லான வங்கியாளர்கள் குழு (எஸ்எல்பிசி) உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் திங்களன்று நடந்த எஸ்எல்பிசி கூட்டத்தில் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் முழுக் கடனை யும் தள்ளுபடி செய்ய முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந் தார். இதுகுறித்து எஸ்எல்பிசி கன்வீனர் கே.எஸ்.பிரதீப் கூறுகையில்,”விவசாயக் கடன், சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன் வசூலுக்கு தடை விதிக்கப்பட்டுள் ளது. பயிரிட முடியாத நிலத்தின் மீதான கடனை அந்தந்த வங்கிகள் முடிவு செய்யும். காப்பீடுகள் பெறுவதற்கான நடைமுறையும் எளிமைப்படுத்தப்படும். 

பேரிடர் பாதித்த பகுதியில் உள்ள 12 வங்கிகளின் மொத்தக் கடன் ரூ.35 கோடி. இதில் பெரும்பாலானவை விவசா யம் மற்றும் சிறுகுறு நடுத்தர நிறுவன (எம்எஸ்எம்இ) கடன்கள் ஆகும். கிராமிய வங்கி (ரூ.15.44 கோடி), மத்திய வங்கி (ரூ.6.69 கோடி), கேரள வங்கி (ரூ.4.92 கோடி), பாங்க் ஆப் பரோடா (ரூ.2.01 கோடி), சவுத் இந்தியன் வங்கி (ரூ.1.36 கோடி), கனரா வங்கி (ரூ.1.29 கோடி), வேளாண் வளர்ச்சி வங்கி (ரூ.1.02 கோடி), எஸ்பிஐ (ரூ.99 லட்சம்), இந்தி யன் வங்கி (ரூ.15.87 லட்சம்), பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ.55 லட்சம்), ஐஎஸ்ஏ எப் (49 லட்சம்), பெடரல் வங்கி (34.05 லட்சம்) ஆகியவையும் கடன் வழங்கி யுள்ளன. 

விவசாயக் கடனாக 2460 பேருக்கு ரூ.19.8 கோடியும், இதர கடனாக 245 பேரு க்கு ரூ.3.03 கோடியும், சில்லறைக் கட னாக 515 பேருக்கு ரூ.12.47 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. கிராமிய வங்கி கடனுக்காக நிவாரணத் தொகையில் கவ னத்திற்கு வந்தது. இது தொழில்நுட்ப கார ணங்களால் ஏற்பட்டது. இந்த தொகை ஞாயிறன்று இரவுக்குள் திருப்பிச் செலுத்தப்பட்டது.வங்கியின் இயக்குநர் குழு கூடி கடன் தள்ளுபடி குறித்து முடி வெடுக்கும்” என அவர் கூறினார். 

தலைமைச் செயலாளர் டாக்டர். வி. வேணு, சாரதாமுரளிதரன், டிங்கு பிஸ்வால், ஷர்மிளா மேரி ஜோசப், ஜாபர் மாலிக், அடீலா அப்துல்லா, பாவேந்திர  குமார், ரிசர்வ் வங்கி, நபார்டு மற்றும் இன் சூரன்ஸ் நிறுவன பிரதிநிதிகள் எஸ்எல் பிசி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.