states

img

மூடநம்பிக்கை, தீய பழக்கங்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும்: கேரள முதல்வர்

திருவனந்தபுரம், ஜன.1- மூடநம்பிக்கை மற்றும் தீய  பழக்க வழக்கங்களுக்கு எதிரான சட்டத்தை அரசு கொண்டு வரும்  என்று கேரள இடது ஜனநாயக  முன்னணி முதல்வர் பினராயி விஜ யன் தெரிவித்தார். இதில் ஸ்ரீ நாரா யண குரு மேற்கொண்ட நகர்வு கள் ஊக்கமளிக்கின்றன என்றும் அவர் கூறினார். 90ஆவது சிவகிரி பயண  மாநாட்டை துவக்கி வைத்த முதல்  வர் மேலும் பேசுகையில், “பகுத்த றிவுடன் சமூக சிந்தனையும் இணைந்த முற்போக்கு சமுதாய மாக கேரளா திகழ்கிறது. அந்த  முற்போக்கு சமூகத்தை பின்னுக்  குத் தள்ள இருண்ட சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து வரு கின்றன. இன்னும் நிலைநிறுத் தப்படாத மறுமலர்ச்சிக்கு வலு வான தற்காப்பை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சியை யும், மறுமலர்ச்சி சிந்தனையை யும் இணைத்து முன்னேற வேண் டும் என்ற ஸ்ரீநாராயணகுருவின் போதனையை அரசும் கடைப் பிடிக்கிறது. ஸ்ரீ நாராயண குருவின் செய்தி கள் தனிமனித - பொது வாழ்க்கை யை தூய்மைப்படுத்தவும் மேம்  படுத்தவும் பயன்பட வேண்டும். கல்வி, தூய்மை, விவசாயம்,  உடல் உழைப்பு போன்றவற்றை சிவகிரி பயணத்தின் நோக்கங்க ளாக குரு வலியுறுத்தினார்.

தொடர் சொற்பொழிவு நடத்தி சமு தாயத்தை இதன்பால் ஈர்க்க  வேண்டும் என்றும் குரு சொன் னார். ஆடம்பரத்தாலும், ஓசை களாலும் பயணத்தை மாசுபடுத்த வேண்டாம் என்றும், தேவை யில்லாமல் ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம் என்றும் குரு அறிவுறுத்தியதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீநாராயணகுரு, ஜனநாய கப் பூர்வமாக நடந்து கொண்டார். இது முற்றிலும் புரிந்துகொள்ளக்  கூடியதாக இருக்க வேண்டும். தன் கருத்தைத் திணிக்காமல், அதி லுள்ள நல்லதைப் புரிந்து கொண்டு  எதிர்க் கருத்தை மாற்றும் ஜன நாயக முறையைக் கடைப்பிடித்த வர். அன்றைய சமூகத்தில் மூட நம்பிக்கைகளும் தவறான வழக் கங்களும் அதிகமாக இருந்தன. அவற்றைக் கையாள்வதில் குரு  காட்டிய முன்மாதிரி பொருத்தமா னது என்றார் முதல்வர் பினராயி  விஜயன். மாநாட்டுக்கு ஸ்ரீ நாரா யண தர்ம சங்க அறக்கட்டளை தலைவர் சுவாமி சச்சிதானந்தா தலைமை வகித்தார்.