திருவனந்தபுரம், ஜன.20- தில்லியில் கேரளாவின் சிறப்பு பிரதிநிதியாக பேரா.கே.வி.தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கேபினட் அமைச்சருக்கு உரிய நிலையில் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல் பினராயி அரசின் போது டாக்டர். ஏ. சம்பத் வகித்த பதவி இது. கே.வி.தாமஸ் 5 முறை மக்களவை உறுப்பினராகவும், ஒன்றிய அமைச்சர் மற்றும் மாநில அமைச்சர் பதவி களையும் வகித்தவர். கண்ணூரில் சிபிஎம் அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப் பட்ட கருத்தரங்கிலும் காங்கிரஸ் கட்சி யின் எதிர்ப்பை மீறி கே.வி.தாமஸ் பங்கேற்றார். திருக்காக்கரா இடைத் தேர்தலில் எல்.டி.எப் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார்.