கோழிக்கோடு, செப். 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், கூத்துப் பரம்பு துப்பாக்கிச் சூட்டை எதிர் கொண்ட தியாகியுமான தோழர் புஷ்பன் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 54.
சுயநிதிக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் கேரள காங்கிரஸ் அர சின் கல்விக் கொள்கையை எதிர்த்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI), 1994 நவம்பர் 25 அன்று தலச் சேரி அருகே கூத்துப்பரம்பில் போராட் டத்தில் ஈடுபட்டது. அப்போது காவல் துறை மோசமான வகையில் துப்பாக் கிச் சூடு நடத்தியது.
இதில், வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த கே.கே. ராஜீவன், மது, ஷிபு லால், பாபு, ரோஷன் உள்பட 5 பேர் தங்களின் உயிரைத் தியாகம் செய்த னர். கழுத்தின் பின்பகுதியில் குண்டு பாய்ந்து புஷ்பனுக்கு, முதுகுத் தண்டு வடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கழுத்திற்கு கீழே முற்றிலும் செயலி ழந்து கடந்த 30 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்க ளாக கோழிக்கோடு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சனிக்கிழமையன்று காலமானார்.