கொச்சி, ஜூன் 19- தென்னிந்தியாவில் உள்ள மிக உயரமான தகவல் தொழில்நுட்ப கோபுரங்கள் ஸ்மார்ட் சிட்டியில் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படத் தொடங்கும். லுலு ஐடி டவர் 1 மற்றும் 2 கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. 12.74 ஏக்கரில் 30 தளங்களில் 33 லட்சம் சதுர அடியில் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இயக்கம் தொடங்கும் பட்சத்தில் இங்கு 30,000 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபுட் கோர்ட், க்ரெச், ஜிம், ரீடெய்ல் ஸ்பேஸ், 100 சதவீதம் பவர் பேக்அப்,சென்ட்ரல் ஏசி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம், மழைநீர் சேகரிப்பு போன்றவை இங்கு இருக்கும். ஸ்மார்ட் சிட்டியில் பிரெஸ்டீஜ் சைபர் கிரீன் ஒன் ஐடி பூங்காவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் திறப்பு விழா நடைபெறும். இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா 9.16 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. ஐந்து லட்சம் சதுர அடியில் மராட் டெக்பார்க் தயாராகி வருகிறது. 50 சதவீதம் கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. ஸ்மார்ட் சிட்டி ஆனது 246 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நகரத்துடன் கூடியது. இதில் ரூ.1835 கோடி மதிப்பிலான திட்டப் பணி கள் நடைபெற்று வருகின்றன.