states

img

கனமழையால் ரூ.300 கோடி இழப்பு

திருவனந்தபுரம், செப்.19- கேரளத்தில் பெய்த கனமழையால் இந்த ஆண்டு மாநில பொதுப் பணித்துறைக்கு மட்டும் ரூ.300 கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர்  பி.ஏ.முஹம்மது ரியாஸ் தெரி வித்துள்ளார். இந்நிலையில், பொதுப் பணித்துறைக்கு சிறப்பு தொகுப்பு ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். திருவனந்தபுரத்தில் செய்தி யாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியதாவது: ஒரு வாரத்தில் பெய்ய வேண்டிய மழை தற்போது ஓரிரு நாட்களில் பெய்து வருகிறது. மழைப்பொழிவு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி  முதல் 11ஆம் தேதி வரை 373 மிமீ  மழை பெய்துள்ளதாக மத்திய வானி லை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வழக்கமான மழையை விட 35 சதவிகிதம் அதிகம். ஆகஸ்ட் 1 முதல் 5 வரை பெய்த மழை 126 சதவிகிதம் அதிகம். மாநிலத்தில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை 190 சதவிகிதம் கூடுதல் மழையும், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை 167 சதவிகிதம் கூடுதல் மழையும் பெய்துள்ளது. தினசரி மழைப்பொழிவு முறை யில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது. சாலையின் இருபுறமும் உள்ள மண் மற்றும் வடி கால்கள் கனமழையை உறிஞ்ச முடியாமல் சாலைகள் இடிந்து விழு கின்றன. இந்த விஷயம் தொடர்பாக நாம் தீவிரமாக கலந்துரையாட வேண்டும். எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீதி அமைத்து நிரந்தர தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.